காற்றுக்கென்ன சீரியலில் இருந்து வெண்ணிலா விலகினரா? விளக்கம் கொடுத்த கதாநாயகி – என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க

0
953
katrukenna veli
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் மக்கள் மத்தியில் பிரபலமாகி வரும் தொடர்களில் ஒன்று தான் காற்றுக்கென்ன வேலி சீரியல். இந்த சீரியல் கடந்த ஆண்டு தான் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. தற்போது இந்த தொடர் ரசிகர்கள் விரும்பி வரும் தொடர் ஆக மாறியுள்ளது. இந்த தொடரில் வெண்ணிலா கதாபாத்திரத்தில் பிரியங்கா நடித்து வருகின்றனர். ஐஏஎஸ் படிக்க வேண்டும் என்ற கனவோடு இருக்கும் வெண்ணிலாவுக்கு அவருடைய அப்பா கல்யாண ஏற்பாடு செய்கிறார். ஆனால், வெண்ணிலா கல்யாண நாளன்று வீட்டை விட்டு வெளியேறி தன் கனவை நனவாக்க போராடுகிறார்.

-விளம்பரம்-

வெண்ணிலாவுக்கு பல்வேறு வகையில் பிரச்சனைகள் வருகிறது. இருந்தும் ஹீரோ வெண்ணிலாவுக்கு உறுதுணையாக நிற்கிறார். இப்படி பல விறுவிறுப்புடன் இந்த சீரியல் சென்று கொண்டு இருக்கிறது. இப்படி இருக்கும் போது இந்த சீரியல் இருந்து கதாநாயகன் விலகி இருந்தார். மேலும், சீரியலில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்து அவர் கூறியிருந்தது, எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியல. நிறைய பேர் இந்த சீரியலில் இருந்து விலகுவது குறித்து மெசேஜ் போட்டு இருந்தார்கள்.

- Advertisement -

காற்றுக்கென்ன வேலி சீரியலில் இருந்து விலகி இருந்த ஹீரோ:

என்னுடைய இன்னொரு பிராஜக்ட்க்கும் காற்றுக்கென்ன வேலி சீரியலுக்கும் நேரம் ஒதுக்குவதில் சில பிரச்சினைகள் ஏற்பட்டு இருக்கு. அது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. எதையுமே என்னால் மேனேஜ் பண்ண முடியல. இதனால் காற்றுக்கு என்ன வேலி டீமுக்கும் எனக்கும் சில கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அது மட்டுமில்லாமல் சீரியலில் என்னுடைய லுக்கில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தார்கள். அதில் எனக்கு உடன்பாடும் இல்லை. இதனால் தான் நான் சீரியல் இருந்து விலகி உள்ளேன். என் மீது இவ்வளவு அக்கறை, பாசத்துடன் விசாரித்த அனைவருக்கும் நன்றி.

காற்றுக்கென்ன வேலி சீரியலில் ஹீரோயின் விலகல்:

எல்லோருடைய ஆதரவும் எனக்கு தேவை. இதேபோல் எல்லோரும் எனக்கு சப்போர்ட் பண்ணுங்கள் என்று கூறி இருந்தார். சூர்யா தர்சனுக்கு பதில் வேறு நடிகர் ஹீரோவாக நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் இவருக்கு முன்னே காற்றுக்கென்ன வேலி சீரியலில் இருந்து சூர்யாவின் அம்மாவாக சாரதா கதாபாத்திரத்தில் இருந்து மாளவிகா அவினாஷ் விலகியிருந்தார். அதேபோல் ஹீரோவுக்கு பெரியம்மாவாக நடித்து இருந்தவரும் விலகி வேறு ஒருவர் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த சீரியல் இருந்து கதாநாயகி விலகுவதாக வந்த வதந்திக்கு பிரியங்கா விளக்கம் கொடுத்திருக்கிறார்.

-விளம்பரம்-

விளக்கம் கொடுத்த கதாநாயகி பிரியங்கா:

சில வாரங்களாகவே இந்த சீரியலில் இருந்து பிரியங்கா விலகுகிறார் என்று சோசியல் மீடியாவை பல்வேறு வதந்திகள் வந்து கொண்டிருந்தது. இதனால் ரசிகர்கள் பலரும் வருத்தம் தெரிவித்து கேள்வி கேட்டிருந்தார்கள். இந்நிலையில் இதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் பிரியங்கா பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். அதில் அவர், என் மீது இவ்வளவு அன்பு வைத்ததற்கு ரொம்ப நன்றி. நான் சீரியலை விட்டு விலகவில்லை. இதெல்லாம் என்னை பிடிக்காதவர்கள் செய்கின்ற வேலை. தயவுசெய்து இந்த மாதிரி பொய்யான தகவல்களை பரப்பாதீர்கள். நான் காற்றுக்கென்ன வேலி சீரியலில் இருந்து விலகவில்லை. இதை பரப்புங்கள் என்று பதிவிட்டிருக்கிறார். இப்படி பிரியங்கா பதிவிட்டிருக்கும் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

பிரியங்காவின் சின்னத்திரை பயணம்:

நடிகை பிரியங்கா கர்நாடகாவை சேர்ந்தவர். இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் மைசூரில் தான். இவர் மாடல் அழகியாக தன்னுடைய பயணத்தை தொடர்ந்தார். பின் கண்ணட சேனல் ஒன்றில் கிருஷ்ணா துளசி சீரியல் மூலம் அறிமுகமானார். அந்த தொடர் கன்னடத்தில் மாபெரும் ஹிட் அடித்தது. இதனை தொடர்ந்து இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சாக்லேட் என்ற தொடர்களிலும் நடித்து தமிழ் சீரியலுக்கு அறிமுகமானார். இந்த தொடர் மலையாளத்தில் ஒளிபரப்பான ‘சாக்லேட்’ என்ற சீரியலின் ரீ – மேக் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் காற்றுக்கென்ன வேலி தொடரின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்.

Advertisement