சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பதிவிடும் போது மிகவும் ஜாக்கரதையாக இருப்பது அவசியம், இல்லையேல் நம்மை வறுத்தெடுத்து விடுவார்கள். அந்த வகையில் சமீபத்தில் அஜாக்கிரதையாக நடிகை காஜல் அகர்வால் பதிவிட்ட புகைப்படம் ஒன்று கடும் கேலி கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.
சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் காஜல் தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். ஆனால், சமீபத்தில் காஜலின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் முகம் சுழிக்கும் புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் பலரும் கிண்டலடித்து வந்தனர்.
இதையும் படியுங்க : இரண்டாவது முறையாக பார்ட் 2-வில் நடிக்கும் விஷால்.! இதாவது ஹிட் ஆகுமா.!
ஆனால், காஜல் வேண்டுமென்றே இப்படி ஒரு முகம் சுழிக்கும்படியான புகைப்படத்தை பதிவிடவில்லை. பொதுவாக இன்ஸ்டாகிராமில் பலரும் பதிவிடும் grid எனப்படும் பல புகைப்படங்கள் சேர்ந்த ஒரு புகைப்படத்தை தான் காஜல் பதிவிட்டுள்ளார்.
அந்த புகைப்பட தொகுப்பில் இருந்து இந்த ஒரு புகைப்படம் மட்டும் இப்படி முகம் சுழிக்கும் புகைப்படமாக அமைந்துவிட்டது. இருப்பினும் உசாராக அந்த புகைப்படத்தில் மட்டும் grid என்று நடிகை காஜல் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.