புகைப்படத்தை வெளியிட்டதால் டோஸ் விட்ட இயக்குனர். கப் சிப் ஆன காஜல்.

0
31675
kajal
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர் 2004 ஆம் ஆண்டு ‘ஹோ கயா நா’ எனும் ஹிந்தி படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானர். பின்னர் 2007 ஆம் ஆண்டு ‘லட்சுமி கல்யாணம்’ என்ற திரைப் படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். அதற்கு பிறகு தான் நடிகை காஜல் 2008 ஆம் ஆண்டு பரத் நடிப்பில் வெளிவந்த ‘பழனி’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். ராம்சரண் உடன் இணைந்து நடித்த மகதீரா என்ற படத்தின் மூலம் தான் நடிகை காஜல் அகர்வால் மக்களிடையே மிகப் பிரபலமாக பேசப்பட்டார். அதற்கு பிறகு தொடர்ந்து சினிமா படங்களில் பிஸியாக நடித்து கொண்டு இருந்தார்.

-விளம்பரம்-

மேலும், நடிகை காஜல் அவர்கள் தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து உள்ளார். தற்போது இவர் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். சமீப காலமாக நடிகை காஜல் அகர்வால் படம் அவ்வளவாக வெளி வரவில்லை. தமிழில் இந்த வருடம் மட்டும் இவர் ஒரே ஒரு படம் தான் நடித்து உள்ளார். அது ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘கோமாளி’ படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்து உள்ளார். ஆனால், இந்த படத்தில் இரண்டு ஹீரோயின்கள் உள்ளார்கள் என்பதால் நடிகை காஜல் அகர்வாலின் கதாபாத்திரம் கொஞ்சம் கம்மி தான் என்று சொல்லலாம். சமீபத்தில் ஹிந்தியில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த படம் “குயின்”.

இதையும் பாருங்க : நீண்ட வருடங்களுக்கு பின்னர் மகனின் புகைப்படத்தை வெளியிட்ட வனிதா. என்ன இப்படி மாறிட்டாரு.

- Advertisement -

இந்த திரைப் படத்தை ரீமேக் செய்து வருகிறார்கள். மேலும்,இந்த படத்தில் நடிகை காஜல் அகர்வால் அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார் என்று தெரிய வந்து உள்ளது. அதோடு இந்த படத்தில் நிறைய ரொமான்ஸ், கசமுசா போன்ற பல மசாலா காட்சிகள் இருப்பதால் சென்சார் போர்டு இந்த படத்தில் இருந்து அந்த காட்சிகளை நீக்க வேண்டும் என சொன்னார்கள். ஆனால், படத்தின் இயக்குனர் நீங்கள் சொல்லும் காட்சிகளை நீக்கி விட்டால் படம் வேற மாதிரி இருக்குமே என்று சென்சார் குழுவிடம் சொன்னார். பின் பிடிவாதமாக அந்த சீன்களை வைக்க வேண்டும் என சென்சார் குழுவினர் உடன் சண்டை போட்டு வருகிறார் இயக்குனர்.

இந்த படத்திற்காக இந்த பிரச்சனை ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்கும் போது நடிகை காஜல் அகர்வால் ‘பாரிஸ் பாரிஸ்’ படத்தின் படப்பிடிப்பில் உள்ளார். மேலும், படப்பிடிப்பு தளத்தில் சக நடிகைகளுடன் சேர்ந்து நடிகை காஜல் புகைப்படம் ஒன்றை எடுத்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் அந்த புகைப்படத்தை இணையதளத்தில் அவர் வெளியிட்டார். இதனைப் பார்த்த இயக்குனர் படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையங்களில் வெளியிடாதீர்கள். அப்புறம் நெட்டிசன்கள் எல்லோரும் ஒவ்வொரு கதை சொல்ல ஆரம்பிச்சுடு வாங்க.

-விளம்பரம்-

பின் படத்தின் மீது உள்ள ஆர்வமும், எதிர்பார்ப்பும் குறைந்து விடும் என்று அறிவுரை கூறினார். ஆனால், இதை எல்லாம் நடிகை காஜல் அகர்வால் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. மீண்டும் ஒரு புகைப்படத்தை எடுத்து இணையத்தில் வெளியிட்டார். இதை பார்த்து கடுப்பான படத்தின் இயக்குநர் நடிகை காஜல் அகர்வாலை தாறு மாறாக வெளுத்து விளாசினார். இதன் பின் தான் காஜல் அகர்வால் அமைதியாக இருக்கிறார் என்று சொல்லலாம். இருப்பினும் தான் சம்மந்தப்பட்ட புகைப்படங்களை மட்டும் வெளியிட்டு வருகிறார்.

Advertisement