mahat-bigg-boss[/caption]
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடன இயக்குனர் கலாவிடம் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து சில கருத்துக்கள் கேட்கப்பட்டது. அப்போது போட்டியாளர்கள் பற்றி தனது கருத்துக்களை கூறிய கலா,மஹத் குறித்து பேசுகையில், கோவப்படுவதற்கு ஒரு அளவிருக்கிறது, இது கோபம் போன்று தெரியவில்லை., ஏதோ வியாதி போல தான் தெரிகிறது. அதிலும் மஹத் ஏற்கனவே ஒரு மெண்டல்' என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மஹதிற்கு ஏற்கனவே வெளியே காதலி இருக்கிறார். இருப்பினும் பல பெண்களை பார்த்து ஆசை பட்டு வருகிறார் என்று கூறியுள்ளார் கலா. அதே போல மும்தாஜ் கடவுளை பிரார்தனை செய்ததை மஹத் கிண்டல் செய்தது மிகவும் தப்பான்னு விஷயம். அதை எல்லாம் விஜய் டிவி ஒளிபரப்பு செய்திருக்க கூடாது என்றும் கூறியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளிய வந்ததும் மஹத், யாஷிகா, ஐஸ்வர்யா ஆகியோருக்கு கண்டிப்பாக எதிர்காலம் கிடையாது. இவர்கள் மூன்று பேர் இல்லை என்றாலே நிகழ்ச்சி உண்மையாக நடக்கும் என்றும், பிக் பாஸ் நிகழ்ச்சி உண்மை என்றால் இந்த வாரம் கண்டிப்பாக மஹத் வெளியேற வேண்டும் என்றும், அபப்டி அவர் வெளியேறவில்லை என்றால் இந்த நிகழ்ச்சி ஒரு script என்பது உண்மையாகிவிடும் என்று தெரிவித்திருக்கிறார் கலா.




