விஜய் அஜித் வராதது காரணத்தால் கலையிழந்த கலைஞர்100 விழா? ரசிகர்கள் கருத்து.

0
526
- Advertisement -

கலைஞர்100 விழாவில் பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்ட நிலையில் நடிகை நயன்தாரா இந்த விழாவிற்கு வந்து இருப்பது சமூக வலைதளத்தில் பேசுபொருளாகி வருகிறது. கலைஞர் கருணாநிதி என்ற பெயரை கேட்காத நபர்கள் தமிழ் நாட்டில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அவர் அரசியலிலும் சரி சினிமாத்துறையிலும் சரி அவர் ஆற்றிய பங்கு மிகப்பெரியது. மு.கருணாநிதி கடந்த 2018ஆம் ஆண்டு வயது மூப்பு காரணமாக தன்னுடைய 94 வயதில் காலமானர்.

-விளம்பரம்-

இவரின் மறைவு தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும், அவருடன் பழகியவர்கள் பலர் கருணாநிதியுடன் இருந்த அனுபவத்தை அவ்வபோது சோசியல் மீடியாக்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று கலைஞரின் நூற்றாண்டு விழா நடைபெற இருக்கிறது. இந்த விழா சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.

- Advertisement -

கலைஞரின் நூற்றாண்டு விழா:

இந்த விழாவில் முதல்வர் மு.க ஸ்டாலின், ரஜினி, கமல், சூர்யா, விஜய், தனுஷ், விக்ரம், சிவகார்த்திகேயன், இசைஞானி இளையராஜா உட்பட திரை பிரபலங்கள் பலர் பங்கேற்க இருக்கின்றார்கள். அதோடு தெலுங்கில் சிரஞ்சீவி, மலையாளத்தில் மம்மூட்டி, மோகன்லால் உட்பட பிற மொழி பிரபலங்களும் இந்த விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். மேலும், இந்த விழாவை மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் நினைவாக திமுக சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.

நிகழ்ச்சி தடைபட காரணம்:

சில மாதங்களுக்கு முன்பே இந்த விழா நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார்கள். அந்த வகையில் இந்த விழா கடந்த மாதமே நடைபெறுவதாக தான் இருந்தது. ஆனால், மிக்ஸாம் புயல் மற்றும் கனமழையால் தான் இந்த நிகழ்வு தள்ளி வைக்கப்பட்டது. இந்தப் புயல் ஒட்டுமொத்த தமிழகத்தையுமே புரட்டி போட்டு இருக்கிறது. இது வரலாறு காணாத மழை பெய்ததால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.

-விளம்பரம்-

நிகழ்ச்சி குறித்த தகவல்:

கடந்த சில வாரங்களாகவே இந்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை மாறி தற்போது தான் பழைய நிலைமைக்கு திரும்பி கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழ் சினிமா வளர்ச்சியில் கருணாநிதியின் பங்களிப்பை போற்றும் விதமாக இந்த விழாவை திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கொண்டாடுகிறார்கள். இன்று மாலை 4:00 மணிக்கு இந்த நிகழ்ச்சி தொடங்கியது.

விஜய் – அஜித் ரசிகர்கள் ஏமாற்றம் :

இந்த நிகழ்ச்சிக்கு விஜய் அஜித் இருவரும் வருவார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இருவருமே இந்த விழாவிற்கு வரவில்லை. மேலும், நடிகர்களை பொறுத்தவரை ரஜினி, கமல், சூர்யா, தனுஷ், கார்த்தி, வடிவேலு, அருண் விஜய் போன்றவர்கள் கலந்துகொண்டனர். இப்படி ஒரு நிலையில் இந்த விழாவிற்கு எதிர்பார்த்த கூட்டம் வரவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், இது தொடர்பான வீடியோக்களும் வைரலாகி வருகிறது.

ரசிகர்கள் கருத்து :

அதிலும் குறிப்பாக ரஜினி பேசிய போது VIP இருக்கைகள் காலியாக இருக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இதே போல கலைஞருக்கு விழா எடுக்கபட்டது இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. அதற்கு முக்கிய காரணம் அப்போது விஜய், அஜித் கலந்துகொண்டனர் என்றும் தற்போது இவர்கள் இருவரும் வராதது ஏமாற்றம் அளித்துவிட்ட்தாகவும் விழாவிற்கு வந்த ரசிகர்கள் கூறியுள்ளனர்.

Advertisement