கல்யாண பரிசு சீரியல் நடிகைக்கு கல்யாணம் முடிந்தது. மாப்பிள்ளை யார் தெரியுமா ?

0
117225
srithika
- Advertisement -

சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் சூப்பர் ஹிட் சீரியல் “மெட்டி ஒலி” சீரியல். இந்த சீரியல் மூலம் தான் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரிதிகா. மேலும், 2010 ஆம் ஆண்டு திருமுருகன் இயக்கத்தில் ஒளிபரப்பப்பட்ட சீரியல் “நாதஸ்வரம்”. இந்த சீரியலில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ரிதிகா நடித்து இருந்தார். இந்த நாதஸ்வரம் சீரியல் மூலம் தான் மக்கள் மத்தியில் பெரிய அளவு பிரபலமானார். அது மட்டும் இல்லாமல் இந்த சீரியல் மூலம் தான் நடிகை ஸ்ரிதிகா தனெக்கென ரசிகர் பட்டாளத்தையும் சேர்த்தார்.

-விளம்பரம்-

இந்த சீரியலை தொடர்ந்து இவர் மாமியார் தேவை, வைதேகி, உறவுகள் சங்கமம் போன்ற பல தொடர்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், முகூர்த்தம், கலசம், கோகுலத்தில் சீதை, உயிர் என பல சீரியல்களில் முன்னணி துணை கதாநாயகியாகவும் நடித்து உள்ளார். தற்போது இவர் கல்யானபரிசு, அழகு ஆகிய இரண்டு சீரியல்களிலும் நடித்து வருகிறார். இவர் சீரியல் நடிகை மட்டுமில்லாமல் தொகுப்பாளினியாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். சின்னத்திரை மட்டும் இல்லாமல் வெள்ளித்திரை படங்களில் நடிகை ஸ்ரிதிகா நடித்து உள்ளார்.

- Advertisement -

அதோடு விளம்பர படங்களிலும் கூட நடித்து உள்ளார். அது 2008 ஆம் ஆண்டு வெளியான ‘மகேஷ், சரண்யா மற்றும் பலர்’ என்ற படத்தின் மூலம் தான் இவர் வெள்ளித்திரையில் பிரபலமானார் . இதனை தொடர்ந்து வெண்ணிலா கபடிகுழு, தனுஷின் வேங்கை, பாலு தம்பி மனசிலே, மதுரை To தேனீ உள்ளிட்ட ஒரு பல படங்களில் நடித்து உள்ளார். இவருக்கு சினிமாவில் பட அமைப்புகள் சரியாக அமையவில்லை என்ற உடன் மீண்டும் சீரியல் நோக்கியே வந்து விட்டார். பின் பல சீரியல்களில் நடித்து மக்களிடமும் இப்போது வரை நீங்காமல் இடம் பிடித்து வருகிறார்.

நாதஸ்வரம் நடிகை ஸ்ரிதிகாவுக்கு வெற்றிகரமாக திருமணம் நடை பெற்றது. இதனால் ரசிகர்கள் எல்லோரும் சோசியல் மீடியாவில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது இவருக்கு 33 வயது ஆகியும் திருமணம் செய்து கொள்ளாமல் சீரியலில் பிசியாக நடித்துக் கொண்டு வந்து இருந்தார். இதனால் இவர் உடன் பணி புரியும் சக நடிகைகள், ரசிகர்கள் எல்லோரும் எப்போ கல்யாணம் என்று பல கேள்விகளை கேட்டு வந்தார்கள். தற்போது நடிகை ஸ்ரிதிகா அவர்கள் ஒரு வழியாக திருமணம் செய்து கொண்டார் என்று தெரிந்த உடன் ரசிகர்கள் அனைவரும் குசியில் உள்ளார்கள்.

-விளம்பரம்-

நடிகை ஸ்ரிதிகா திருமணம் டிசம்பர் 30-ஆம் தேதி கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடந்து முடிந்தது. மேலும், இவர்கள் திருமணம் குறித்த வீடியோவை நடிகை ஸ்ரிதிகா அவர்கள் தன்னுடைய இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியது, கடைசியில் என் திருமணம் முடிந்து விட்டது என்று கருத்து தெரிவித்து உள்ளார். இவருடைய திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டு உள்ளதாகவும் தெரிய வந்து உள்ளது. அதுமட்டும் இல்லாமல் இவருடைய திருமண வீடியோவை பார்த்து ரசிகர்கள் அனைவரும் நடிகை ஸ்ரிதிகா அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement