மும்பையில் முத்திரை பதித்து கலக்கி வரும் வித்யா பாலன் சில ஆண்டுகளுக்கு முன்னர் பொருளாதார ரீதியில் தான் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தவர் தான் என்பது உங்களுக்கு தெரியுமா!
அவ்வளவு பிரச்சனைகளையும் தாண்டி பாலிவுட்டில் நுழைந்து முத்திரை பதிப்பது என்பது சாதாரண விஷயமே இல்லை.அதுவும் பாலிவுட்டில் சாதிப்பதெல்லாம் பலருக்கு கனவாகவே முடிந்த கதையெல்லாம் பல உள்ளன. ஆனால் வித்யாபாலன் அதை சாதித்து காட்டியிருப்பது அவரது தன்னம்பிக்கையை காட்டுகின்றது.
வித்யா பாலனை போலவே பின்தங்கிய நிலையில் இருந்து உயர்ந்த சூப்பர்ஸ்டார் தான் ஷாருக்கானும். ஒரு காலத்தில் இரயில் நிலைய ஓரங்களில் தூங்கியவர் தன்னுடைய தொடர் முயற்சிகளால் இன்று மும்பை திரையுலகத்தையே தன்வசம் வைத்துள்ளார். அன்று இரயில் நிலையத்தில் தூங்கியவர் இன்று பலஆயிரம் கோடிகளுக்கு சொந்தக்காரர்.
மும்பை திரை உலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவரான கங்கனா ராவத் பண பற்றாக்குறையால் ஒருகாலத்தில் பிரட்டும் ஊறுகாய் மட்டும் தின்று நாட்களை கழித்துள்ளார்
பிரபல நடிகர் அக்ஷய் குமார் ஒரு காலத்தில் சமையல் கலைஞராக வேலைபார்த்து பின்னர் படிப்படியாக உயர்ந்தவர்.
வித்யா பாலன் முதலில் சின்னத்திரையில் கால் பதித்து ,விளம்பர படங்களில் நடித்து, பின்னர் தன்னுடைய திறமைகளின் மூலம் உயர்ந்து பாலிவுட்டிற்கு வந்தவர்.
துயரங்களை கடந்து சாதனையாளர்களான ரியல் ஹீரோக்களுக்கு Behind Talkies சார்பாக ஒரு பெரிய சல்யூட்.