ரோஷினி,அகிலனை தொடர்ந்து பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து வெளியேறிய அஞ்சலி – விலக்கியதற்கு இது தான் காரணமா ?

0
734
- Advertisement -

சமீப காலமாகவே மக்களின் பொழுதுபோக்கு நிகழ்வாக சின்னத்திரை தொடர்கள் அமைந்துள்ளது. அதிலும் கொரோனா லாக் டவுனில் இருந்து அனைவரும் சின்னத்திரை சீரியலை நோக்கி தான் சென்று கொண்டு இருக்கிறார்கள். குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருக்கும் தொடர்களில் ஒன்றாக பாரதி கண்ணம்மா சீரியல் திகழ்கிறது. இந்த தொடர் தொடங்கிய காலத்திலிருந்து இப்போது வரை விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், இந்த தொடரில் பாரதியாக அருண் பிரசாத் நடிக்கிறார். கண்ணம்மாவாக ரோஷினி ஹரிப்ரியன் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

சமீபத்தில் தான் ரோஷினி ஹரிப்ரியன் சினிமா வாய்ப்பு கிடைத்ததால் சீரியலில் இருந்து வெளியேறி இருந்தார். தற்போது கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து வருகிறார். வினுஷா தேவி பார்ப்பதற்கு அச்சு அசலாக ரோஷினி போல் இருக்கிறார். மேலும், புதிய கண்ணம்மாவாக வினுஷா நடிக்க ஆரம்பத்திலிருந்து சீரியல் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றது. இதனிடையே வெண்பா கதாபாத்திரத்தில் நடித்த பரினாவுக்கு குழந்தை பிறந்திருப்பதால் சீரியலில் இருந்து அவருடைய காட்சிகள் மட்டும் காண்பிக்காமல் இருந்தார்கள்.

- Advertisement -

பாரதி கண்ணம்மா சீரியல்:

வெண்பா கதாபாத்திரத்தில் நடித்த பரினா மீண்டும் வில்லியாக சீரியலில் என்றி கொடுத்து விட்டார். இந்நிலையில் தற்போது சீரியலில் இருந்து அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்த கண்மணி விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவின் தங்கையாக அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் கண்மணி மனோகரன். இவர் ஆரம்பத்தில் சீரியலில் வில்லத்தனங்கள் செய்து வந்தார். பின் பாரதியின் தம்பி அகிலை அஞ்சலி திருமணம் செய்து கொள்கிறார். இருந்தாலும் இவர் தன் அக்காவை பழிவாங்குவதற்கு பல்வேறு திட்டங்களை தீட்டி இருந்தார்.

பாரதி கண்ணம்மா சீரியலில் அஞ்சலி ரோல்:

பின் அஞ்சலி கர்ப்பமாக இருக்கும் போது மனம் திருந்தி கண்ணம்மாவிற்கு ஆதரவாக நின்று வருகிறார். இப்படி பாசிட்டிவாக இவருடைய கதாபாத்திரம் சென்று கொண்டிருப்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படி ஒரு நிலையில் சில வாரங்களாகவே பாரதி கண்ணம்மா சீரியல் அஞ்சலியை பார்க்க முடியவில்லை. இது குறித்து ரசிகர்கள் பலரும் கேட்டிருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் குயின் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கண்மணி களமிறங்கியிருக்கிறார்.

-விளம்பரம்-

சீரியலை விட்டு விலகும் அஞ்சலி:

அதே போல் அதே தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பாக இருக்கும் சீரியல் ஒன்றிலும் முக்கிய கதாபாத்திரத்தில் கண்மணி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வந்தன. இதனை அடுத்து பாரதி கண்ணம்மா சீரியலில் கண்மணி விலகி விட்டாரா? இல்லையா? என்று பல கேள்விகள் எழுந்துள்ளது. இந்நிலையில் இதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் கண்மணி பதிவு ஒன்றை போட்டிருக்கிறார். அதில் அவர், விரைவில் வேறொரு ப்ராஜெக்டில் உங்களை என்டர்டைன்மென்ட் செய்கிறேன் என்று கூறி இருக்கிறார். இவரின் இந்த பதிவு ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது.

விளக்கம் கொடுத்த கண்மணி:

இதன் மூலம் இவர் பாரதிகண்ணம்மா சீரியல் இருந்து விலகியது தெள்ளத் தெளிவாகிறது. மேலும், ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் புதிய சீரியலில் தான் இவர் நடிக்க இருக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருக்கு பதில் யார் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார்? என்று ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். அதுமட்டும் இல்லாமல் இந்த தொடரில் இருந்து அகிலன் கதாபாத்திரத்தில் முதலில் நடித்து இருந்த நடிகர் வெளியேறியது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. தற்போது அவர் பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.

Advertisement