கர்ணன் படத்தின் ‘கண்டா வரச் சொல்லுங்க’ பாடலை பாடிய கிடக்குழி மாரியம்மாள் யார் தெரியுமா ? ஏற்கனவே இத்தனை பாடலை பாடியவர் தான்.

0
5825
karnan
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் நடிகர் தனுஷ். தனுஷ் அவர்கள் சினிமா உலகில் நடிகர் மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், திரைப்பட இயக்குனர் என பல திறமையை காண்பித்து வருகிறார். கடந்த ஆண்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளி வந்த “அசுரன்” படம் அசுர வசூல் வேட்டையை ஆடியது. தற்போது ஜாகமே தந்திரம், கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு படம் என்று படு பிசியாக நடித்து வரும் தனுஷ், பரியேறும் பெருமாள் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன்’ படத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
கிடக்குழி மாரியம்மாள்

இந்த படத்தில் மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். இது தனுஷின் 41 வது படமாகும். இவர்களுடன் யோகி பாபு. மலையாள நடிகர் லால் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு இந்த படத்தை தயாரிக்கிறார்.1991 ஆம் ஆண்டு கொடியன்குளம் மணியாச்சி ஜாதி கலவரத்தை மையமாக வைத்து தான் தனுஷ் நடிக்கும் கர்ணன் படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

தனுஷின் கர்ணன் படத்தை தடை செய்ய வேண்டும் என்று முக்குலத்தோர் புலிப்படை சார்பில் போலீசில் மனு அளிக்கப்பட்டு இருந்தது பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி இருந்தது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் இருந்து கண்டா வரச் சொல்லுங்க என்ற பாடல் நேற்று (பிப்ரவரி 18) வெளியாகி இருந்தது. இந்தப் பாடலை அழகிய நாட்டுப்புற தொடரில் ஆடிய மாரியம்மாள் யார் என்பது பலரும் அறிந்திராத விஷயம் சிவகங்கை மாவட்டம் திட்டக்குடி என்ற கிராமத்தில் பிறந்ததால் இவரது பெயர் கிடாக்குழி மாரியம்மாள் என்று அழைக்கப்படுகிறது சிறுவயதிலிருந்தே பாடுவதில் ஆர்வம் கொண்ட இவர் ஆரம்பத்தில் ஊர் திருவிழாக்களில் பாட ஆரம்பித்த இவர் சாவு வீடுகளில் இவரது பாடல்களுக்கு ஆரம்ப காலத்தில் அங்கீகாரம் கிடைத்தது என்று கூறியிருக்கிறார் ஊராகச் சென்று ஒப்பாரி பாடிக் கொண்டிருந்த இவர் அதன்பின்னர் கரகாட்டம் ஆட துவங்கி இருக்கிறார். மேலும், இவர் கம்யூனிஸ்ட் மேடைகளில் கூட பாடியிருக்கிறாராம்.

மதுரை ராம்ஜி ஆடியோ உடன் இணைந்து மாரியம்மாள் பல்வேறு நாட்டுப்புறப் பாடல்களை பாடியிருக்கிறார். மேலும் இவர் வெடிகுண்டு முருகேசன், மாதவனும் மலர்விழியும், மதுரைசம்பவம், களவாணி 2 ஆகிய படங்களில் இதற்கு முன்னர் பாடி இருக்கிறார். மேலும், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சரி கம பா நிகழ்ச்சியின் வாயிலாக பிரபலமடைந்த லட்சுமி இவருடைய மகள் தான். இத்தனை வருடங்கள் பல பாடல்களை பாடினாலும் கர்ணன் படத்தின் மூலம்தான் இவர் ரசிகர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்று இருக்கிறார் இதனால் தன்னுடைய 50 வருட கனவு நிறைவேறி விட்டதாக நெகழ்ச்சியுடன் கூறியிருக்கிறார் மாரியம்மாள்.

-விளம்பரம்-
Advertisement