ரெண்டு வருசம் கழித்து பசங்களோட வெளியில் வந்தேன் – முதல் முறையாக தன் மகனை வெளியுலகத்திற்கு காட்டிய கார்த்தி.

0
1656
karthi
- Advertisement -

தன் மகன் மற்றும் மகளுடன் பல மாதங்கள் கழித்து வெளியில் சென்ற போது எடுத்த புகைப்படம் ஒன்றை நடிகர் கார்த்தி பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் எத்தனையோ வாரிசு நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தியும் அடக்கம். தமிழ் சினிமாவின் 80 காலகட்டம் துவங்கி இன்று வரை பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகுமார். இவரது மகன்களான சூர்யா, கார்த்தி இருவருமே இன்று தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர்களாக திகழ்ந்து வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். கார்த்தியின் மூத்த மகனான சூர்யா ஜோதிகாவை திருமணம் செய்து கொண்டார். மேலும், இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர்.

-விளம்பரம்-

கார்த்தியின் மனைவி மற்றும் மகள் :

அதே போல கார்த்தி நடிகர் கார்த்தி கடந்த 2011-ம் ஆண்டு ஈரோட்டைச் சேர்ந்த ரஞ்சனி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். பெற்றோர் பார்த்து நிச்சயித்த இந்தத் திருமணம் கோயம்புத்தூரில் நடந்தது. ரஞ்சனி கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர். இத்தம்பதியருக்கு 2013-ம் ஆண்டு இவர்களுக்கு ஒரு மகளும் பிறந்தனர். அவருடைய பெயர் உமையாள். இப்படி ஒரு நிலையில் கார்த்தியின் மனைவி இரண்டாம் முறையாக கர்ப்பமாக இருந்தார்.

- Advertisement -

இரண்டாவதாக பிறந்த மகன் :

இப்படி ஒரு நிலையில் நடிகர் கார்த்தி மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்து இருந்தது. அதை தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி தெரிவித்து இருந்தார் கார்த்தி, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு நாங்கள் ஆண் குழந்தையுடன் ஆசீர்வதிக்கப்பட்டு நிற்கிறோம் இந்த நேரத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நன்றி கூறிக் கொள்கிறேன் எங்களின் மகனுக்கு உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்களையும் கேட்டுக்கொள்கிறேன் கடவுளுக்கு நன்றி. என்று கூறி இருந்தார்.

Kandhan (Karthi Son) Wiki, Biography, Age, Family, Images - News Bugz

இரண்டாம் மகன் கந்தன் :

மேலும், தனது மகனுக்கு ‘கந்தன்’ என்று முருகப்பெருமானின் பெயரை வைத்துள்ளார் கார்த்தி. இது குறித்து தனது சமுக வலைதளத்தில் பதிவிட்டு இருந்த கார்த்தி, கண்ணா, அம்மாவும், அக்காவும், நானும் உனக்கு மிக ஆசையாக “கந்தன்” என்று பெயர் சூட்டி இருக்கிறோம். உன் வருகையால், நம் சுற்றம் மேலும் இனிமையாகட்டும். அன்புடன்… அப்பா.என்று பதிவிட்டு இருந்தார். சிவகுமாரின் குடும்பம் முருக பெருமான் மீது மிகுந்த பக்தி கொண்டவர்கள்.

-விளம்பரம்-

முருக கடவுள் மீது கொண்டுள்ள பக்தி :

சூர்யாவின் உண்மையான பெயர் கூட முருக கடவுளின் பல பெயர்களில் ஒன்றான சரவணன் தான். மேலும், கார்த்தி என்பது முருக கடவுளின் மற்றொரு பெயரினை கார்த்திகேயன் என்ற பெயரின் சுருக்கம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் தான் கார்த்தி தன் மகனுக்கும் முருக பெருமானின் பெயரை வைத்து இருக்கிறார். சூர்யாவும் சரி கார்த்தியும் சரி அடிக்கடி தங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது வழக்கம்.

முதல் முறையாக மகனை காட்டிய கார்த்தி :

அதே போல குடும்பத்துடன் அடிக்கடி எங்காவது சென்று வருவார்கள். ஆனால், கொரோனா பிரச்சனை காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தன் குடும்பத்தை வெளியில் பெரிதாக அழைத்து செல்லாத கார்த்தி, சமீபத்தில் தன் குடும்பத்துடன் வெளியில் சென்றுள்ளார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ள கார்த்தி, இரண்டு ஆண்டுகளுடன் குழந்தைகளுடன் வெளியில் சென்று இருந்தேன் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement