கார்த்திகை தீபம் தீபாவா இது ? நிஜத்தில் எப்படி இருக்கிறார் பாருங்க. சினிமா To சீரியல் வந்த கதை.

0
5067
arthika
- Advertisement -

சினிமா முதல் சீரியல் பயணம் குறித்து கார்த்திகை தீபம் சீரியல் நடிகை ஹர்த்திகா அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த அந்த வகையில் பல வருடங்களாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த சீரியல் செம்பருத்தி. இந்த சீரியலில் ஆதி கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்திருந்தவர் கார்த்திக் ராஜ்.

-விளம்பரம்-

இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது இவர் பிரேக் எடுத்துக்கொண்டார். தற்போது இவர் சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் என்ற புது சீரியலில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். இந்த சீரியல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. கார்த்திகேயா என்ற கதாபாத்திரத்தில் கார்த்திக் ராஜ் நடிக்கிறார். மேலும், கதாநாயகியாக தீபா என்ற கதாபாத்திரத்தில் ஹர்த்திகா நடிக்கிறார். இந்த சீரியலின் கதாநாயகன் கார்த்திக் பற்றி அனைவரும் அறிந்ததே. ஆனால், கதாநாயகி ஹர்த்திகா புதிது.

- Advertisement -

கார்த்திகை தீபம் சீரியல்:

இவரை பற்றி பலரும் அறியாத விஷயத்தை தான் இங்கு பார்க்க போகிறோம். ஹர்த்திகா கேரளாவை சேர்ந்தவர். கேரளத்தில் உள்ள கோட்டயத்தில் தான் இவர் பிறந்து வளர்ந்தார். இவர் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் திரை உலகில் கால் பதித்திருக்கிறார். இவர் தமிழ், மலையாளம் போன்ற மொழி படங்களில் நடித்திருக்கிறார். ஆனாலும், சரியான அங்கீகாரம் இவருக்கு கிடைக்கவில்லை. திரையில் சரியான வாய்ப்புகள் அமையாததால் இவர் சின்னத்திரைக்கு வந்தார். தற்போது இவர் கார்த்திகை தீபம் என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

ஹர்த்திகா அளித்த பேட்டி:

இந்நிலையில் சமீபத்தில் ஹர்த்திகா அவர்கள் பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர், தன்னுடைய நடிப்பு பயணம் குறித்து கூறியிருந்தது, வெள்ளி திரையோ, சின்னத்திரையோ என எதுவாக இருந்தாலும் என்னுடைய கதாபாத்திரமே எனக்கு முக்கியமானது. நல்ல கதை மற்றும் கதாபாத்திரம் அமைந்தால் எதில் வேண்டுமானாலும் நான் நடிக்க தயார். வெள்ளி திரையில் எனக்கு சரியாக வாய்ப்புகள் வரவில்லை. அதனால் என்னை நிரூபிக்க முடியாமல் போனது. ஆனால், தமிழில் கார்த்திகை தீபம் என்ற சீரியலின் கதை எனக்கு ரொம்ப பிடித்து விட்டது.

-விளம்பரம்-

சீரியல் பயணம் குறித்து சொன்னது:

அதனால் முழு உழைப்பையும் போட்டு நடித்துக் கொண்டிருக்கிறேன். ஆரம்பத்தில் என்னுடைய உடல் குறித்தும் நிறம் குறித்தும் பல விமர்சனங்கள் எழுந்திருந்தது. அப்போதெல்லாம் என்னுடைய அம்மா தான் எனக்கு நம்பிக்கை அளித்து என்னுடைய பணத்தை தொடங்க வைத்தார். எனக்கு உறுதுணையாக வாரி இருப்பது மாரி சீரியலில் நடித்து வரும் நடிகை அபிதா தான். எனக்கு அவர் ஒரு நல்ல நண்பராக மட்டும் இல்லாமல் வழிகாட்டியாகவும் இருக்கிறார். சக நடிகர்களும் எனக்கு உறுதுணையாக இருக்கின்றனர்.

சீரியல் குறித்து சொன்னது:

கார்த்திகை தீபம் சீரியலில் நடிக்கும் பல நடிகர்கள் எனக்கு தெரியும். அவர்கள் அனைவரும் என்னை நன்றாகத் தான் பார்த்துக் கொள்கிறார்கள். கதாநாயகன் கார்த்திக்குடன் நான் ஏற்கனவே ஒரு தமிழ் படம் நடித்தேன். பிளாக் அண்ட் ஒயிட் என்ற அந்த திரைப்படம் விரைவில் வெளியாகியிருக்கிறது. அவருடன் ஏற்கனவே பழகி பழக்கம் இருந்ததால் இந்த சீரியலில் நடிக்க மிகவும் சவுரியமாக இருக்கிறது. எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதை எடுத்து நடிக்க நான் தயாராக இருக்கிறேன். கண்டிப்பாக எனக்கான வாய்ப்புகள் அமையும் என்று கூறியிருந்தார்.

Advertisement