தனுஷ் – ஐஷ்வர்யா விவாகரத்துலாம் செய்யல – தனுஷ் தந்தை கஸ்தூரி ராஜா பரபரப்பு பேட்டி.

0
902
dhanush
- Advertisement -

தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து செய்யவில்லை என்று தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா அளித்துள்ள பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீப காலமாகவே சினிமா பிரபலங்களின் விவாகரத்து குறித்த செய்திகள் சோசியல் மீடியாவில் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு நடிகை சமந்தா- நாக சைதன்யா இருவரும் விவகாரத்தை அறிவித்து இருந்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஆழ்த்தியது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத ரசிகர்களுக்கு நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து ரசிகர்கள் மத்தியில் பேரிடியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக நடிகர் தனுஷ் திகழ்ந்து வருகிறார்.

-விளம்பரம்-

செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரையுலகிற்கு தனுஷ் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் பல வெற்றிப் படங்களை கொடுத்து உள்ளார். மேலும், தனுஷ் அவர்கள் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், திரைப்பட இயக்குனர் என பல துறைகளில் சாதித்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் ஹாலிவுட், பாலிவுட்டிலும் கால்த்தடத்தை பதித்து இருக்கிறார்.

- Advertisement -

தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து:

இதனிடையே நடிகர் தனுஷ் அவர்கள் 2004 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினியின் முத்த மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா , லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளார்கள். இப்படி ஒரு நிலையில் தாங்கள் பிரிவதாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்கள் சமூக வலைதளபக்கத்தில் அறிவித்து இருப்பது ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தனுஷ் வெளியிட்ட அறிக்கை:

மேலும், இதுகுறித்து தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பது, ’18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, ஒன்றாக அனுசரிப்பு என இருந்தது. இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஒரு கட்டத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரமாக முடிவு செய்துள்ளோம். மேலும், இருவரும் எங்களை சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம்.

-விளம்பரம்-

வைரலாகும் தனுஷ் விவாகரத்து:

தயவு செய்து எங்கள் முடிவை மதித்து இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்து இருந்தார். இப்படி தனுஷின் இந்த முடிவை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் பல விதமான கருத்துக்களை போட்டு வருகின்றனர். இந்நிலையில் தனுஷின் தந்தையும், ஐஸ்வர்யாவின் மாமனாருமான இயக்குனர் கஸ்தூரி ராஜா பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பது,

Selvaraghavan Posts Photo With Father, Brother; All You Need to Know About  Their Next

இயக்குனர் கஸ்தூரி ராஜா பேட்டி:

கருத்து வேறுபாடு காரணமாக மட்டுமே தனுஷும் ஐஸ்வர்யாவும் சண்டை போட்டுக் கொண்டுள்ளனர். இது கணவன் மனைவிக்கு இடையே வழக்கமாக நடைபெறும் குடும்ப சண்டை தான் .இது விவாகரத்து அல்ல. தனுஷும் ஐஸ்வர்யாவும் தற்போது சென்னையில் இல்லை. இருவரும் ஹைதராபாத்தில் இருக்கிறார்கள். இருவரையும் போனில் தொடர்பு கொண்டு பேசி சில அறிவுரைகளை வழங்கி உள்ளேன் என்று கூறி இருக்கிறார்.

Advertisement