விஜயகாந்த் இல்லையென்றால் இன்று என் குடும்பம் இல்லை – தனுஷ் தந்தை அளித்த பேட்டி

0
1000
- Advertisement -

விஜயகாந்த் இல்லையென்றால் இன்று என்னுடைய குடும்பம் இல்லை என்று தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. கோலிவுட்டில் கேப்டன் என்ற அந்தஸ்துடன் உச்ச நடிகராக திகழ்ந்தவர் விஜயகாந்த். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இவர் தன்னுடைய நடிப்புத் திறமை மூலம் திரை உலகில் மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியிலும் தனெக்கென ஒரு இடத்தைப் பிடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இனிக்கும் இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் துறைக்கு அறிமுகமானவர் விஜயகாந்த். அதனை தொடர்ந்து இவர் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கிறது. மேலும், ரஜினி, கமல், சரத்குமார்,பிரபு போன்ற பல நடிகர்களுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு தமிழ் சினிமா உலகில் முத்திரை பதித்து இருந்தவர் விஜய்காந்த்.

- Advertisement -

விஜயகாந்த் திரைப்பயணம்:

மேலும், 2015 ஆம் ஆண்டு வெளியான சகாப்தம் என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் விஜயகாந்த் நடித்திருப்பார். இது தான் ரசிகர்கள் அவரை திரையில் பார்த்த கடைசி படம். அதற்குப்பின் அவர் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். பிறகு விஜய்காந்த் முழு நேர அரசியலில் களமிறங்கி இருந்தார். பின் உடல் நல குறைவால் சில ஆண்டுகளாக விஜயகாந்த் சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று வருகிறார்.

விஜயகாந்த் குறித்த தகவல்:

தற்போது இவருடைய கட்சியை இவரது குடும்பம் தான் கவனித்து வருகிறது. மேலும், இவர் நடிப்பை தாண்டி மக்களுக்கு பல உதவிகளை செய்திருக்கிறார். இவர் சினிமாவின் உச்சத்துக்கு சென்றாலும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து கொண்டு இருக்கிறார். அதனால் தான் இவரை புரட்சி கலைஞர் என்று பலரும் பாராட்டி வருகிறார்கள். ஆனால், இவர் மக்களுக்கு உதவிய சமயத்தில் பெரிதாக ஊடகங்கள் இல்லாததனால் இவர் செய்த உதவிகள் எதுவும் வெளியே தெரியவில்லை.

-விளம்பரம்-

கஸ்தூரிராஜா அளித்த பேட்டி:

ஆனால், சமீப காலமாக விஜயகாந்த் செய்த உதவிகள் எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலாகி தான் வருகிறது. இந்த நிலையில் தனுஷின் தந்தை கஸ்தூரிராஜாவுக்கு விஜயகாந்த் செய்திருக்கும் உதவி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் கஸ்தூரிராஜா அவர்கள் விழா ஒன்றில் கலந்திருந்தார். அதில் அவர் கூறியிருந்தது, என்னுடைய இரண்டாவது மகள் மருத்துவ சீட்டுக்காக பரிச்சை எழுதி ஒரு மார்க் குறைவினால் சீட்டு கிடைக்காமல் வீட்டில் அழுது கொண்டு இருந்தாள். அந்த சமயம் பார்த்து விஜயகாந்த் வீட்டிற்கு வந்தார்.

விஜயகாந்த் செய்த உதவி:

அவர் என் மகள் அழுவதை பார்த்து என்னாச்சு? ஏன்? என்று என்னிடம் கேட்டார். நான் அவரிடம் நடந்ததை சொன்னேன். உடனே அவர் என்னுடன் வீட்டுக்கு வாருங்கள் என்று என்னை அழைத்துக் கொண்டு சென்றார். உடனே ராமச்சந்திரா கல்லூரி உடையார் சாரை அழைத்து வீட்டில் பேசினார். பின் என் மகளுக்கு மருத்துவ சீட் கிடைத்தது. இன்று என் மகள் அப்போலோ மருத்துவமனையில் ஒரு மருத்துவராக பணிபுரிந்து இருக்க காரணம் கேப்டன் விஜயகாந்த் தான் என்று கூறியிருக்கிறார்.

Advertisement