தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்தில் முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டு இருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகிற்கு அறிமுகமான கீர்த்தி சுரேஷ் தற்போது முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் ‘கீதாஞ்சலி’ படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் ரஜினிமுருகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தற்போது கீர்த்தி சுரேஷ் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து வருகிறார். மேலும், தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து உள்ளார்.
தற்போது இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழி படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற பழம்பெரும் நாயகி சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை “மகாநதி” என்று தெலுங்கில், “நடிகையர்-திலகம்” என்று தமிழில் படமாக எடுத்தார்கள். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் அவர்கள் சாவித்திரி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
இதையும் பாருங்க : ஓராண்டிற்கு பின்னர் தனது ட்வின்ஸ் குழந்தகளின் கியூட் புகைப்படத்தை முதன் முறையாக வெளியிட்ட பிரஜின்.
சமிபத்தில் கீர்த்தி சுரேஷ் அவர்கள் இந்த படத்திற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார். இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் பாஜக தொழிலதிபரை மணக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இந்த நியூஸ் சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி வருகிறது. இது குறித்து பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் அவர்கள் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பது, கீர்த்தி சுரேஷ் அவர்கள் பாஜக தொழிலதிபரை திருமணம் செய்து கொள்ள போகிறார். இது நம்பகமான தகவல் தான். சமீப காலமாக கீர்த்தி சுரேஷ் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் இயக்குனர்கள் கீர்த்தி சுரேஷ் இடம் கிட்டத்தட்ட ஐம்பது கதைகளை சொல்லிவிட்டார்கள். ஆனால்,கீர்த்தி சுரேஷ் எந்த கதையும் பிடிக்கவில்லை என்றும், வித்தியாசமாக கதை இருந்தால் சொல்லுங்கள் நடிக்கிறேன் என்றும் கூறினாராம்.
இதையும் பாருங்க : கொரோனா லாக் டவுன்- தன் மகனுக்கு தானே முடி வெட்டிய தூங்காநகரம் பட நடிகர். வைரலாகும் புகைப்படம்.
இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் அப்பா பாஜக கட்சியுடன் மிகவும் நெருக்கம் உடையவராக உள்ளார். தற்போது இவர் பாஜக தரப்பில் ஒரு கோடீஸ்வர தொழிலதிபர் கீர்த்தி சுரேஷ்க்கு திருமணம் முடித்துவைக்க முடிவு செய்துவிட்டார். இதற்கு கீர்த்தி சுரேஷும் க்ரீன் சிக்னல் கொடுத்து விட்டாராம். கூடிய விரைவில் கீர்த்தி சுரேஷ் பாஜக தொழிலதிபரை மணந்து கொள்வார் என்பது உறுதியாகிவிட்டது என்று கூறினார்.
தற்போது கீர்த்தி சுரேஷ் அவர்கள் சூப்பர் ஸ்டார் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து மலையாளத்தில் பிரியதர்ஷன் இயக்கி வரும் வரலாற்று கதையான ‘மரக்கார் ‘ என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தில் நடிகர் மோகன்லால் நடித்து உள்ளார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் மலையாள சேச்சியாக மாறி படு வித்யாசமான கெட்டப்பில் நடிக்கிறாராம்.