கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கோடீஸ்வரி நிகழ்ச்சி தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமாகியுள்ளது. அதற்கு முக்கிய காரணமே சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் 1 கோடி ரூபாயை வென்ற கௌசல்யா என்று சொன்னாலும் அதற்கு மிகை இல்லை. நடிகர் அமிதாப் பச்சன் நடத்திய கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியைப் போல் தமிழிலும் கோடீஸ்வரி என்ற நிகழ்ச்சி பின்னர் தமிழ் தெலுங்கு கன்னடம் என்று பல்வேறு மொழியில் ஒளிபரப்பானது. ஆரம்பத்தில் தமிழில் இந்த நிகழ்ச்சியை சரத்குமார் தொகுத்து வழங்கி இருந்தார்.
அவரை தொடர்ந்து சூர்யா, பிரகாஷ் ராஜ், அரவிந்த் சாமி என்று பலர் தொகுத்து வழங்க இந்த நிகழ்ச்சி கோடீஸ்வரன் என்ற பெயரிலேயே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்த நிலையில் பெண்களுக்காக பிரத்யேகமாக கோடீஸ்வரி என்ற பெயரில் “கலர்ஸ் தமிழ்” தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்கி வருகிறார். சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் கௌசல்யா என்பவர் 1 கோடி ரூபாயை வென்று சாதனை படைத்தார்.
இதையும் பாருங்க : சமையல்கார கதாபாத்திரத்திற்கு 100 கிலோ ஏற்றும் சூது கவ்வும் பட நடிகர். இப்போதைக்கு இத்தனை கிலோ ஏற்றியுள்ளாராம்.
இதுவரை பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டாலும் யாரும் இதுவரை முழுமையாக 30 கேள்விகளுக்கும் பதில் அளித்து 1 கோடி ரூபாயை வென்றது இல்லை. இந்த நிலையில் அந்த சாதனையை முறியடித்துள்ளார், மதுரையை சேர்ந்த மாற்றுத் திறனாளி பெண்ணான கௌசல்யா என்பவர். ஒரு வயது குழந்தையின் தாய், கௌசல்யா செவித்திறன் மற்றும் பேச்சு குறைபாடு உடையவர், மேலும் அதிர்வுகள், உதடு வாசிப்பு மற்றும் கணவரின் உதவியுடன் தொடர்பு கொள்கிறார். வாழ்க்கையில் பல தடைகளை எதிர்கொண்ட கௌசல்யா , தனது பி.எஸ்சி, எம்.எஸ்சிக்கு பின்னர் எம்பிஏ பட்டம் முடித்து பல்கலைக்கழக முதலிடம் பெற்று சவாலான கல்வி பயணத்தின் மூலம் இவரை கண்டிருந்தார் மாவட்ட நீதிபதி .
இன்று, அவர் மதுரை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் ஜூனியர் உதவியாளராக பணிபுரிகிறார். கௌசல்யா வெற்றி பெற்றயதை அடுத்து பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கௌசல்யா தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமியையும் உலக நாயகன் கமல் அவர்களையும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.