பிரபல ஹீரோவின் மகனால் கீர்த்தி செட்டி துன்புறுத்தப்பட்டிருக்கிறார் என்று பரவிய சர்ச்சைக்கு கீர்த்தி செட்டி கொடுத்திருக்கும் விளக்கம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தெலுங்கு சினிமா உலகில் மிகவும் பிரபலமான பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் கீர்த்தி செட்டி. இவர் தற்போதைய இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவியின் மருமகனான பஞ்ச வைணவ தேஜ் நடிப்பில் வந்த படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.
இந்த திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் நடிகை கீர்த்தி ஷெட்டி. இப்படத்தில் விஜய் சேதுபதியின் மகள் கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். தன்னுடைய 17 வயதிலேயே கதாநாயகியாக அறிமுகமாகி ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தார். 2021ஆம் ஆண்டு வெளியான இப்படமானது வணீக ரீதியாக பெரிய வரவேப்பை பெற்று மிகப்பெரிய ஹிட் அடுத்து வசூல் சாதனை படைத்தது.
இப்படத்திற்கு பிறகு நடிகை கீர்த்தி ஷெட்டி “ஷ்யாம் சிங்கா ராய், பங்கராஜா, தி வாரியர்ஸ் போன்ற பல படங்களில் நடித்து இருக்கிறார். அதிலும் இவர் நடித்திருந்த “தி வாரியர்ஸ்” படத்தில் வே;சிவந்த “புல்லட்டுப் பாடல்” தென் இந்திய சினிமாவில் வைரலானது குறிப்பிடத்தக்கது. அதன் பின் வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த கஸ்டடி படத்தில் கீர்த்தி செட்டி நடித்து இருந்தார். இந்த படத்தில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா, சரத்குமார், அரவிந்த்சாமி, ப்ரியாமணி, சம்பத், செட்டி, உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது இவர் அஜயந்தே ரண்டம் மோஷனம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஜித்தின் லால் இயக்குகிறார்.
இந்த படத்தில் டோவினோ தாமஸ், ஐஸ்வர்யா ராஜேஷ் உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து இவர் நடிகர் ஜெயம் ரவியின் நடிப்பில் உருவாகி வரும் ஜீனி படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமாவில் இருக்க அறிமுகமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
இப்படி இவர் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் பிரபல ஹீரோவினால் கீர்த்தி செட்டி துன்புறுத்தப்பட்டிருக்கிறார் என்றும், கீர்த்தி செட்டி கலந்து கொள்ளும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் அவர் கலந்து கொண்டு தொல்லை செய்கிறார். அது மட்டும் இல்லாமல் தன்னிடம் வரச் சொல்லி கட்டாயப்படுத்துவதாகவும் மீடியாக்களிடம் கீர்த்தி ஷெட்டி தெரிவித்ததாக புகைப்படத்துடன் சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தது.
இது குறித்து பலருமே பலவிதமாக கருத்துக்களை பதிவிட்டிருந்தார்கள். இந்நிலையில் இது தொடர்பாக கீர்த்தி செட்டி விளக்கம் ஒன்று கொடுத்திருக்கிறார். அதில், இந்த தகவல் முற்றிலும் பொய். தயவு செய்து கதைகளை உருவாக்குவதையும், தவறான தகவலை பரப்புவதையும் நிறுத்துங்கள். இது ஒரு அடிப்படை ஆதாரமற்ற வதந்தி. இதை இன்னும் பரப்பாதீர்கள் என்று twitter பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். தற்போது கீர்த்தி செட்டியின் இந்த பதிவுதான் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.