தமிழ் சினிமா உலகில் 90 கால கட்டங்களில் முன்னணி நடிகையாக கொடி கட்டி பறந்தவர் குஷ்பு. இவர் முதன் முதலாக 1980களில் தான் தன்னுடைய சினிமா பயணத்தைத் தொடங்கினார். பின் குஷ்பூ அவர்கள் தமிழ் ,தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி திரைப் படங்களில் நடித்து உள்ளார். இவர் தமிழ் சினிமா உலகில் ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்க்குமார், விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் படங்களில் நடித்து உள்ளார். நடிகை குஷ்பு படங்களில் நடிகை மட்டுமில்லாமல் அரசியல்வாதியும் ஆவார். குஷ்புவின் மீது உள்ள அன்பினால் அந்த காலகட்டத்திலேயே அவருக்கு கோவில் கட்டினார்கள் அவரின் ரசிகர்கள்.
சினிமாவில் பிரபலமான திரைப்பட இயக்குனர் சுந்தர்.சியை 2001ம் ஆண்டு நடிகை குஷ்பூ அவர்கள் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரு பெண்கள் உள்ளார்கள். இதில் இளைய மகள் விரைவில் சினிமாவிலும் அறிமுகமாக இருப்பதாக அறிவித்து இருந்தார் குஷ்பூ. ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.
இப்படி ஒரு நிலையில் இன்று குஷ்பூ தனது திருமண நாளை கொண்டாடி வருகிறார். மேலும், இவர்கள் திருமணம் 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9 ஆம் தேதி நடந்தது. திருமணத்திற்கு முன்னரே 5 வருடங்கள் குஷ்பூ மற்றும் சுந்தர் சி காதலித்து இருந்துள்ளனர். குஷ்பூவிடம் முதலில் காதலை சொன்னது சுந்தர் சி தான். சுந்தர் சி காதலை சொன்னதும் உடனே குஷ்பூவும் ஏற்றுக்கொண்டார்.
Our life in 4 pics. From then to now, nothing has changed. Thank you for always being with me. To love, to fight, to chide, to reprimand, above all to understand me & love me just as I am. To accept me for what I am. Happy 23rd anniversary.Being married to you is a blessing. ❤️ pic.twitter.com/hGXDBan2j1
— KhushbuSundar (@khushsundar) March 8, 2023
இப்படி ஒரு நிலையில் இன்று தனது திருமண நாளில் குஷ்பூ காதலிக்கும் போது, காதலித்த பிறகு, திருமணம், குழந்தை என 4 விதமான புகைப்படங்களை பதிவிட்டு ‘நான்கு புகைப்படத்தில் எங்களுடைய வாழ்க்கை அன்று முதல் இன்று வரை எதுவும் மாறவில்லை எப்போதும் எனக்கு துணையாய் இருப்பதற்கு நன்றி காதல் சண்டை இது எல்லாம் மேலே நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே என்னை நேசிப்பதற்கு நன்றி.
இனிய இருபத்தி மூன்றாம் ஆண்டு திருமண நாள். உங்களை திருமணம் முடித்தது என்னுடைய பாக்கியம்’என்று உருக்கமுடன் பதிவிட்டுள்ளார். தற்போது நடிகை குஷ்பு அவர்கள் வெள்ளித்திரை படங்களில் குணசித்திர வேடங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் தற்போது தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.