அந்த நடிகையிடம் உடலுறவு கொண்டேன்.. லலிதா கொள்ளையன், எய்ட்ஸ் நோயாளி முருகன் கொடுத்த ஷாக்..

0
39056
lalitha
- Advertisement -

சமீபத்தில் திருச்சியில் நடந்த நகைக்கடை திருட்டில் கொள்ளைக்காரன் முருகனுடன் பிரபல நடிகையும் தொடர்பு வைத்துள்ளார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும், இதனால் போலீசார்கள் குழப்பத்திலும், அதிர்ச்சியில் உள்ளனர்.திருச்சியில் உள்ள லலிதா ஜூவல்லரி நகை கடையில் சில வாரங்களுக்கு முன் சுவரில் துளைபோட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றது திருட்டு கும்பல். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். மேலும், இவர்கள் செய்த செய்த திருட்டு வேலை போலீசுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் இருந்தது. இதனை தொடர்ந்து கொள்ளையடித்த நகை சம்பந்தமாக திருவாரூரில் மணிகண்டன் என்பவர் மாட்டிக்கொண்டார். ஆனால் ,அவருடன் வந்த சுரேஷ் என்பவர் மட்டும் தப்பி ஓடினார். மேலும், மணிகண்டனிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தியதில் இந்த கொள்ளை சம்பவத்தில் கொள்ளை தொழிலிலேயே பிரபலமான திருவாரூர் முருகனுக்கும் சம்பந்தம் இருக்கிறது என தெரியவந்தது.

-விளம்பரம்-
Image result for lalitha jewellery theft

இதைத் தொடர்ந்து தப்பி ஓடிய சுரேஷ் திருவண்ணாமலை கோர்ட்டிலும், திருவாரூர் முருகன் பெங்களூரு கோர்ட்டிலும் சரண் அடைந்தனர். இந்நிலையில் நகை கொள்ளை வழக்கில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த கணேசனை போலீசார் கைது செய்தார்கள்.மேலும், அவனிடம் 6 கிலோ 100 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்தார்கள். இதனைத்தொடர்ந்து இந்த நகை கொள்ளை வழக்கில் இதுவரை மொத்தம் 22¾ கிலோ நகைகள் மீட்கப்பட்டன என்றும் போலீசார் அறிவித்துள்ளது. இந்த நகை கொள்ளை குறித்து போலீஸ் உயர் அதிகாரி கூறியது, இவர்கள் சில மாதங்களுக்கு முன்பாகவே இந்த நகை கடைக்கு வந்து நகை வாங்குவது போல நடித்து வேவு பார்த்துக் கொண்டிருந்தார்கள். மேலும், எந்த வகையில் நகையை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றால் சரியாக இருக்கும் என திட்டங்களை தீட்டி இருந்தார்கள்.

இதையும் பாருங்க : முதல் ஆளாக சரவணனை சந்தித்த சாண்டி மற்றும் கவின்.. வைரலாகும் புகைப்படங்கள்..

- Advertisement -

அதற்காக அவர்கள் கடையின் இடது புறத்தை தேர்வு செய்தனர். அது மட்டும் இல்லைங்க சுவரில் போடப்பட்ட துளை ஒரு நாளில் போடப்பட்டது இல்லை என்றும்,அது குறைந்த பட்சம் மூன்று அல்லது நான்கு நாட்கள் இருக்ககும்.அதுவரை அவர்கள் நகை வாங்குவது போல வந்து கொஞ்சம் கொஞ்சமாக கடப்பாரை மூலம் துளை போட்டுஉள்ளனர். எப்போதுமே திருட்டு வேலையில் ஈடுபடுவதற்கு முன்பும் ,பின்பும் அவர்கள் எந்த ஒரு செல்போனையும் பயன்படுத்த மாட்டார்கள். அது மட்டுமில்லாமல் அவர்கள் நகை திருட்டுத் தொழிலில் அதிகமாக பயன்படுத்துவது வாக்கி-டாக்கி தான். இதுகுறித்து சென்னையில் ஒரு முறை கொள்ளை வழக்கில் கூட வாக்கி- டாக்கி பயன்படுத்தி முருகன் கைதானர். அதனால் திருவாரூர் முருகன் புத்திசாலித்தனமாக இந்த நகை கொள்ளையில் வாக்கி -டாக்கி பயன்படுத்துவதை தவிர்த்து, அதற்குப் பதிலாக கயிறை பயன்படுத்தி கொள்ளையடித்தார்கள். மேலும், நகைகளை கொள்ளையடித்த பின் காரில் தப்பிச் சென்றார்கள்.

Image result for lalitha jewellery theft

கொள்ளை அடித்த நகைகளில் முருகன் இரண்டு பங்கெடுத்துக் கொண்டு மீதியை மற்றவர்களுக்கு பிரித்துக் கொடுத்தான். மேலும், இந்த கொள்ளைக்கு பிறகு முருகன் பெங்களூரில் நிரந்தரமாக செட்டில் ஆகிடலாம் என முடிவு செய்து தான் திட்டமிட்டு நகை கொள்ளை செய்தான் என தெரிய வந்தது. அதோடு முருகனை போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி வந்த பின்புதான் மேலும் விபரங்கள் தெரியவரும் என்றும் கூறினார்.பெங்களூர் கோர்ட்டில் சரண் அடைந்துள்ள கொள்ளைக்காரன் முருகன் மீது தமிழ்நாடு மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் கொள்ளை வழக்குகள் பதிவாகியுள்ளன. அதுமட்டுமில்லாமல் அவர் கொள்ளையடித்த நகைகள் மற்றும் பணத்தில் இருந்து தனக்கு வந்த பங்கில் சிலவற்றை சினிமா துறையில் பயன்படுத்தி வந்துள்ளதாகவும், அதிலும் சில நடிகைகளுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் ,முருகன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நடிகையின் பெயர் கூறுவதால் போலீசார் மிகுந்த குழப்பத்தில் உள்ளனர்.

-விளம்பரம்-

இதுகுறித்து மாநகர போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியது, தமிழ் சினிமாவில் பிரபல இளம் வயது நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால்,ஆளை பார்த்தால் நடிகையுடன் தொடர்பு இருக்குமா?ஏன்னா அந்த அளவிற்கு கொடூரமாக இருக்கிறான். ஒருவேளை பணத்திற்காக நடிகைகளும் இந்த மாதிரி கீழ்த்தரமான வேலைகளும் செய்வார்களோ? என பல சந்தேகங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் முருகனை போலீஸ் காவலில் வைத்து விசாரித்தால்தான் எந்த நடிகைகளுடன் பழக்கம் உள்ளது? பணத்தை என்ன செய்தார்? என பல கேள்விகளுக்கு பதில் தெரியும் என போலீசார் கூறினர்.

Advertisement