தமிழ் சினிமா உலகில் என்னென்றும் சாக்லேட் பாயாக திகழ்பவர் நடிகர் மாதவன். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான ‘அலைபாயுதே’ படம் மூலம் தான் மாதவன் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். ரொமான்டிக் படமான இது சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்ப்பை பெற்றது. சொல்லபோனால் நடிகர் மாதவனுக்கு இந்த படம் தான் சினிமா வாழ்க்கையில் ஒரு நல்ல துவக்கமாக இருந்தது. இப்படி ஒரு நிலையில் மாதவன் இன்று தனது 51வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவரை பற்றிய ஒரு சிறு பிளாஸ் பேக்கை பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் நுழைந்த போது சாக்லட் பாய் என்ற முத்திரையுடன் வந்த மாதவன் தற்போது ஒரு சிறந்த நடிகராக விளங்கி வருகிறார்.அலைபாயுதே படத்தில் அறிமுகமாவதற்கு முன்பே அவருக்கு திருமணமும் ஆகி இருந்தது. இருப்பினும் அலைபாயுதே படத்திற்கு பின்னர் தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக வலம்வந்த மாதவனுக்கு ஆண் ரசிகர்களைவிட பெண் ரசிகர்கள் தான் அதிகம் இருந்தனர்.
இதையும் பாருங்க : விருது வாங்கிட்டு இதான் பேசினேன் – விருதை திருப்பிக் கொடுத்ததற்கான காரணத்தை சொன்ன பாலாஜி முருகதாஸ்.
மாதவனுக்கு திருமணம் ஆகிவிட்டது என்று தெரிந்தும் அவரை பல பெண்கள் திருமணம் செய்துகொள்ள விரும்பினார்கள். தற்போது மாதவனுக்கு தோலுக்கு மேல் வளர்ந்த ஒரு மகனும் இருக்கிறார். இந்த நிலையில் 18 வயது நிரம்பிய பெண் ஒருவர் மாதவனை திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்து இருந்தார். நடிகர் மாதவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டார். அந்த புகைப்படத்தில் இந்த வயதிலும் ஹாண்ட்ஸமாக இருக்கிறீர்கள் என்று பலரும் கமன்ட் செய்தனர்.
அதில் பெண் ஒருவர், எனக்கு 18 வயது ஆகிறது, நான் உங்களை திருமணம் செய்து கொண்டால் தவறா? என்று கமன்ட் செய்துள்ளார். இளம் ரசிகையின் இந்த கமெண்டை கண்டு சற்றும் கோபப்படாத மாதவன், உங்களுக்கு என்னை விட ஒரு சிறந்த நபர் கவனராக அமைவார் என்று கமன்ட் செய்துள்ளார். இந்த வயதிலும் மாதவனுக்கு பெண்கள் மத்தியில் இப்படி ஒரு ரசிகர் கூட்டமா என்று வாயடைத்து உள்ளனர்.