தமிழ் சினிமாவில் சமீப காலமாக பல்வேறு துயர் சமபாவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக பல்வேறு பிரபலமான நடிகர்களின் மரணம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் விவேக் காலமாகி இருந்தது தமிழ் திரையுலகை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. அவரை தொடர்ந்து கே வி ஆனந்த், பாண்டு என்று பலர் காலமான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இப்படி ஒரு நிலையில் பிரபல காமெடி நடிகரான நெல்லை சிவா சமீபத்தில் காலமாகியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பாண்டியராஜ் ஹீரோவாக அறிமுகமான ஆண்பாவம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் காமெடி நடிகர் நெல்லை சிவா அதன் பின்னர் தமிழில் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார் குறிப்பாக இவர் நடித்த வெற்றிக்கொடிகட்டு திருப்பாச்சி போன்ற திரைப்படங்கள் இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. நெல்லை தமிழில் பேசிய சிவா காமெடி நடிகரான விவேக் மற்றும் வடிவேலுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார்.
இதையும் பாருங்க : என்ன பண்ற பாடிய ஏன் இவ்ளோ லூஸ் விட்றனு திட்டிடாறு – அஜித்துடன் இரண்டு படங்களில் நடித்த நடிகை பேட்டி.
அதிலும் குறிப்பாக வடிவேலுவுடன் இணைந்து நடித்த ‘கிணத்தை காணோம்’ காமெடி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் தான். இதுவரை 500க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர் இவர் விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் சீரியலிலும் அறிமுகமானார்.இப்படி ஒரு நிலையில் இவர் நேற்று (மே 11) மாரடைப்பால் காலமானார்.
இவருக்கு திருமணம் ஆகவில்லை, இதுகுறித்து பேசியுள்ள மதுரை ’சில்லுனு ஒரு காதல்’ சீரியலில் நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு காதல் ஜோடிக்குக் கல்யாணம் செஞ்சுவைப்பது போல சீன் எடுத்தாங்க. அன்று ’ஏன்ணே நீங்க கல்யாணம் பண்ணிக்காமலே இருந்திட்டீங்க’னு கேட்டுட்டேன். கொஞ்ச நேரம் யோசிச்சவர். ‘அதைப் பேசினோம்னா மணிக்கணக்குல போகும். ஒரு மெகா சீரியலே எடுக்கலாம். அதனால இன்னொரு நாளைக்கு ஆற அமர உட்கார்ந்து போசுவோம்’னார்.முத்து. கடைசியாப் பார்த்த அன்னைக்கு ‘சாப்பாட்டுல ஏதோ சரியில்ல, ஃபுட் பாய்சன் ஆகிடுச்சு’ன்னு சொன்னார்.ஆனால்,அவரை அதன் பின்னர் பார்க்க முடியாமல் போய்விட்டது என்று உருக்கமுடன் கூறியுள்ளார் மதுரை முத்து.