சினிமாவில் உள்ள முகமூடி நடிகர்கள் பற்றி நடிகை மாளவிகா மோகனன் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் மாளவிகா மோகனன். இவர் மலையாள சினிமாவில் கடந்த 2013ஆம் ஆண்டு நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த “பட்டம் போலெ” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தார்.
இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ரஜினியின் சூப்பர் ஹிட் படமான “பேட்ட” படத்தில் மாளவிகா மோகனன் நடித்திருந்தார். அதுவும் பேட்ட படத்தில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் நடித்த மாளவிகாவை பலரும் வயதான நடிகை என்று தான் ஆரம்பத்தில் நினைத்து இருந்தார்கள். ஆனால், அம்மணியின் போட்டோ ஷூட்டை பார்த்து தான் இவர் இளம் கவர்ச்சி புயல் என்று பலருக்கும் தெரிந்தது.
மாளவிகா மோகனன் திரைப்பயணம்:
அதன் பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தில் மாளவிகா மோகனன் நடித்து இருந்தார். இந்த படம் மிக பெரிய அளவில் வசூல் சாதனை செய்து இருந்தது. மாஸ்டர் படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று சாதனை படைத்த நிலையில் இவருக்கு பிரபலமும் கூடியது. பின் இவர் நடிகர் தனுஷ் நடித்த மாறன் படத்தில் நடித்திருந்தார். கடைசியாக இவர் பா ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்து இருந்த தங்கலான் படத்தில் நடித்து இருந்தார்.
மாளவிகா மோகனன் படங்கள்:
இப்படம் கன்னட சினிமாவில் வெளியான சூப்பர் ஹிட் படமான கே ஜி எஃப் படத்தின் கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டு இருந்தது. இப்படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை அடுத்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் சர்தார் 2 என்ற படத்தில் நடித்து வருகிறார்.
மாளவிகா மோகனன் பேட்டி:
ஏற்கனவே சர்தார் முதல் பாகத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் தான் இரண்டாம் பாகத்தையும் இயக்கி இருக்கிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான சர்தார் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது. இந்த படத்தில் கார்த்தி போலீஸ் அதிகாரி, உளவாளி என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். அதோடு கார்த்தியின் சினிமா கேரியரில் அதிக வசூல் செய்த படமாக சர்தார் அமைந்தது. தற்போது இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் மாளவிகா மோகனன், சினிமாவில் சில நடிகர்கள் இருக்கிறார்கள்.
ஆண் நடிகர்கள் பற்றி சொன்னது:
அவர்கள் பெண்களை மதிப்பவர்கள் போல தங்களை காட்டிக் கொள்வார்கள். அந்த முகமூடியை சரியான நேரத்தில் அணிந்து நல்ல பெயர் வாங்கிக் கொள்கிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டுமே முகமூடி அணிந்திருக்கும் பல நடிகர்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் எல்லாமே புத்திசாலிகள் என்று நினைத்து கொள்கிறார்கள். எந்தெந்த நேரங்களில் பெண்களை மதிக்கும் வகையில் பேச வேண்டும் என்று நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், கேமராவுக்கு பின்னால் அவர்கள் அப்படியெல்லாம் கிடையாது. ரொம்பவே நடிக்கிறார்கள். இதை நான் கண்கூடவே பார்த்திருக்கிறேன். ஏன் இந்த பாசாங்கு தனம் என்று புரியவில்லை. ஆண் என்றால் ஒரு மாதிரியும் பெண் என்றால் ஒரு மாதிரியும் பார்க்கும் போக்கு இந்த சினிமாவில் ஆழமாகவே கிடைக்கிறது. இது எப்போது முடிவுக்கு வரப்போகிறது என்று தெரியவில்லை என்று கூறியிருக்கிறார்.