தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் மலையாள மொழியில் பல படங்களில் நடித்து இருக்கிறார். இவர் ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் மஜித்இயக்கிய ‘பியாண்ட் த கிளவுட்ஸ்’ படம் மூலம் தான் இந்தியில் அறிமுகமாகி இருந்தார். பின் கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழி படங்களில் நடித்து இருந்தார். பிறகு இவர் தமிழில் முதல் படத்திலேயே ரஜினியுடன் களம் இறங்கி இருந்தார். இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘பேட்ட’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்று இருந்தது.
மேலும், இந்த படத்தில் சசி குமாரின் மனைவியாக குடும்ப குத்து விளக்காக நடித்திருந்தார் மாளவிகா. அதுவும் பேட்ட படத்தில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் நடித்த மாளவிகா மோகனை பலரும் வயதான நடிகை என்று தான் ஆரம்பத்தில் நினைத்து இருந்தார்கள். ஆனால், அம்மணியின் போட்டோ ஷூட்டை பார்த்து தான் அம்மணி இளம் கவர்ச்சி புயல் என்று பலருக்கும் தெரிந்தது.
இதையும் பாருங்க : ‘2 நாய்களை வரவேற்கிறேன்’ இமான் வெளியிட்ட திருமண அறிக்கை போன்றே அவரின் முன்னாள் மனைவி வெளியிட்ட அறிக்கை.
இறுதியாக நடித்த மாறன் படம் :
அதன் பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தில் மாளவிகா மோகனன் நடித்து இருந்தார்.இந்த படம் மிக பெரிய அளவில் வசூல் சாதனை செய்து இருந்தது. தற்போது இவர் பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இறுதியாக தனுஷ் நடிப்பில் வெளியான மாறன் படத்தில் நடித்து இருந்தார். ஆனால், இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான விமர்சனத்தையே பெற்றது.
கொச்சையாக கேள்வி கேட்ட நபர் :
மாளவிகா மோகனன் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். இவர் தான் அடிக்கடி எடுக்கும் போட்டோஷுட் புகைப்படம், ரில்ஸ் வீடியோ என்று ஏதாவது ஒன்று சோசியல் மீடியாவில் பகிர்ந்து ஒவருகிறார். இதனால் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் இவர் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் அளித்து வருகிறார். அந்த வகையில் ரசிகர் ஒருவர் ‘எப்படி அது இவ்வளவு பெருசாக ஆனது’ என்று மோசமாக கேட்டிருந்தார்.
மாளவிகா கொடுத்த பதிலடி :
இதற்கு பதில் அளித்த மாளவிகா ‘ சமூக ஊடகங்களில் சில ஆண்களின் தைரியம் எவ்வளவு பெரியது, இல்லையா? அதை நினைத்து நான் கூட திகைத்து இருக்கிறேன்’ என்று பதில் கொடுத்தள்ளார். இன்னோரு ரசிகரோ ”உங்களின் ரசிகர்கள் என்று சொல்லிக்கொள்ளும் அனைவரும் சமூக வலைதளத்தில் உங்களின் ஹாட் போட்டோ ஷூட் மூலம் கவரப்பட்டவர்கள் தான் என்று கூறி இருந்தார்.
தொடர்ந்து பதிலடி கொடுத்த மாளவிகா :
இதற்கு பதில் அளித்த மாளவிகா ‘அப்போ நீங்களும் என் போட்டோ ஷூட்டை பார்த்து எனக்கு ரசிகராகி என்னை ட்விட்டரில் பாலோ செய்கிறீர்களா’ என்று கேள்வியை கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் ‘மாறன் படத்தில் படுக்கை அறையின் ஒரு ரொமான்ஸ் காட்சி இருக்கும். அதை எத்தனை முறை எடுத்தீர்கள்? என்று கேள்வி கேட்டிருந்தார். இந்த ட்வீட்டை பார்த்த மாளவிகா மோகனன் கூறியிருப்பது, அதை விட உங்கள் மண்டைக்குள் இருப்பது மோசமான இடம் என்று பதிலளித்திருக்கிறார்.