ஹீரோக்கள் நள்ளிரவில் வீட்டுக்கு அழைப்பார்கள் – கமல் பட நடிகையின் ஷாக்கிங் பேட்டி.

0
421
Mallika Sherawat
- Advertisement -

கடந்த சில வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்துவரும் அவர் அதற்கான காரணத்தை விளக்கியுள்ளதுடன் பாலிவுட் சினிமாவின் கருப்பு பக்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பெரும்பாலும் இந்தியில் நடித்து வரும் பல நடிகைகளைப் பற்றி அறிந்திருக்கவும் அதிக வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் இந்தி நடிகை மல்லிகா ஷெராவத்தும் ஒருவர். இவர் இந்தியில் வெளியான ‘மர்டர்’ படத்தின் மூலம் இந்தி சினிமா மட்டுமல்லாது தென்னிந்திய சினிமாவிலும் படு பிரபலம் அடைந்தார் என்று தான் சொல்ல வேண்டும். 2002 ஆம் ஆண்டு இந்தியில் அறிமுகமான இவர் அதன் பின்னர் ஒரு சில படங்களில் நடித்து வந்தார். ஆனால், இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தித் தந்தது 2004 ஆம் ஆண்டு வெளியான மர்டர் திரைப்படம் தான். இந்த படத்தில் படுகவர்ச்சியாக நடித்து அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பிரபலம் அடைந்தார்.

-விளம்பரம்-

தசவாதரம்,ஓஸ்தி படங்களில் நடித்த நடிகை :-

இந்தியில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர் தமிழில் கடந்த 2008 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான ‘தசாவதாரம்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் சிம்பு நடிப்பில் வெளியான ‘ஒஸ்தி’படத்தில் ஒரு குத்தாட்டம் போட்டார்.இந்தியில் படு பிசியாக நடித்து வந்த இவர் தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்து வருகிறார். இறுதியாக இவர் 2017 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான ‘ஜீனத்’ என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் சினிமாவில் இருந்து முற்றிலும் விலகிய இவர், சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

- Advertisement -

தேசியகொடியை அவமதித்த வழக்கு :-

தேசியக்கொடியை அவமதிக்கும் வகையில் அதனை ஆடையாக உடுத்தியதாக பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் மீது ஹைதராபாத் நகர போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். டர்ட்டி பாலிட்டிக்ஸ்’ என்ற பெயரில் உருவாகி வரும் இந்திப் படத்தின் சுவரொட்டிகள் 2014 ஆம் ஆண்டு. நாடு முழுவதும் வெளியிடப்பட்டன. அவற்றில், தேசியக் கொடியை இடுப்பில் கட்டியபடி நடிகை மல்லிகா ஷெராவத் சுழல் விளக்குடன் கூடிய ஒரு காரின் மீது அமர்ந்திருக்கும் காட்சி பலரை திடுக்கிடவும், திரும்பிப் பார்க்கவும் வைத்தது. இதையடுத்து சமூக சேவகர் தனகோபால் ராவ் என்பவர் தேசிய கொடி அவமதிப்பு சட்டப்படி மல்லிகா மீதும், பட தயாரிப்பாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

பாலிவுட்டின் கருப்பு பக்கம் :-

பாலிவுட்டில் அவர் நடிப்பில் தற்போது ஆர்.கே/ஆர்.கே என்கிற திரைப்படம் தற்போது உருவாகி உள்ளது. இதன் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய மல்லிகா ஷெராவத், தான் முன்னணி நடிகர்களின் ஆசைக்கு இணங்க மறுத்ததால் அவர்கள் தனக்கு பட வாய்ப்பு தரவில்லை என கூறியுள்ளார். சமீபத்தில் மல்லிகா அளித்த பேட்டியில், “பாலிவுட்டின் ‘ஏ’ லிஸ்ட் ஹீரோக்கள் யாரும் என்னுடன் பணியாற்ற விரும்பவில்லை.

-விளம்பரம்-

ஏனென்றால் அவர்களிடம் நான் சமரசம் செய்துகொள்ள மாட்டேன் என்பதே உண்மை. இது மிக எளிமையானது. தங்களால் கட்டுப்படுத்தக் கூடிய, தங்களுக்கு சமரசம் செய்துகொள்ளும் நடிகைகளையே அந்த நடிகர்கள் விரும்புவார்கள். நான் அப்படிப்பட்டவள் அல்ல. என் ஆளுமையும் அப்படியானது அல்ல. அடுத்தவரின் விருப்பங்களுக்குள் என்னை உட்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. அந்த சமரசத்துக்கு செல்லவும் நான் விரும்பவில்லை.

வீட்டுக்கு ஆழைப்பார்கள் :-

ஹீரோக்கள் வரையறுக்கும் சமரசம் என்னவென்றால், அவர்கள் உட்காரச் சொன்னால் உட்கார வேண்டும், நிற்க சொன்னால் நிற்க வேண்டும். இப்படி எதைச் சொன்னாலும் செய்யத் தயாராக இருக்க வேண்டும். ஏன் அதிகாலை 3 மணிக்கு ஹீரோ உங்களை அழைத்து, ‘என் வீட்டுக்கு வா’ என்று சொன்னால் நீங்கள் உடனடியாக அங்குச் செல்ல வேண்டும். அப்போதுதான் நீங்கள் அவரின் படத்தில் இருக்க முடியும். இல்லை வீட்டுக்குச் செல்ல நீங்கள் மறுத்தால் அவரின் படத்தில் இருந்து நீக்கப்படுவீர்கள்” என்று வெளிப்படையாக பேசியுள்ளார். அவரின் இந்த பேச்சு பாலிவுட் உலகில் கவனிக்கப்படும் நிகழ்வாக மாறியுள்ளது.

Advertisement