நடிகர் செந்திலுக்கு சொந்தமான அபார்ட்மென்டில் பித்தலாட்டம். கைது செய்த போலீசார்.

0
4853
Senthil
- Advertisement -

சினிமாவில் உள்ள பல்வேறு பிரபலங்களும் நடிப்பையும் தாண்டி தனிப்பட்ட முறையில் எதாவது தொழிலை செய்து வருவது ஒன்றும் புதிதான விஷயம் அல்ல. அதிலும் பெரும்பாலான நடிகர் நடிகைகளின் இரண்டாவது தொழில் ஹோட்டல் அல்லது உணவகமாக தான் இருக்கும். தமிழ் சினிமாவில் உள்ள பல்வேறு பிரபலங்களுக்கு சொந்தமாக சொகுசு ஹோட்டல்கள் கூட இருக்கிறது. சமீபத்தில் பிரபல காமெடி நடிகர் சூரி கூட மதுரையில் தனது ஆறாவது உணவகம் ஒன்றை திருந்து வைத்தார். இப்படி பல்வேறு நடிகர்களும் ஹோட்டல் அல்லது தங்கும் விடுதியை தான் தங்களது இரண்டாவது தொழிலாக வைத்து வருகிறார்கள்.

-விளம்பரம்-
Image result for actor senthil"

அந்த வகையில் பிரபல காமெடி நடிகர் செந்திலும், தமிழ் சினிமாவில் செந்தில் கௌண்டமணி காமெடிகளை யாரும் மறக்க முடியாது. இருவரையும் ஸ்க்ரீனில் ஒரு சேர பார்த்து விட்டால் சிரிப்பு தானாக வந்துவிடும். அப்படி ஒரு இணை இருவரும். கிட்டத்தட்ட 15 வருடங்கள் தனியாக தமிழ் சினிமாவின் காமெடி டிபார்ட்மென்ட்டை கவனித்துக் கொண்டனர். இவருடம் சேர்ந்து ராமராஜனின் கரகாட்டக்காரன் படத்தில் செய்த காமெடியை இண்று வரை ரசிக்கின்றனர் மக்கள். அதன் பின்னர் செந்தில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார் செந்தில். தற்போது செந்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘ராசாத்தி’ என்ற தொடரில் நடித்து வருகிறார்.

- Advertisement -

இந்த நிலையில் செந்திலுக்கு சொந்தமான அபார்டமண்டை வைத்து மோசடி செய்த நபர் கைது செய்ய பட்டுள்ளார். காமெடி நடிகர் செந்திலுக்கு சென்னை விருகம்பாக்கத்தில் சாலிகிராமம் பகுதியில் உள்ள மூன்றாவது தெருவில் பத்து அறைகள் கொண்ட சொந்தமாக ஒரு கட்டிடம் இருக்கிறது. கடந்த 2013ம் ஆண்டு இந்த கட்டிடத்தை சாலை கிராமத்தை சேர்ந்த சகாயராஜ் என்பவர் மாதம் இரண்டரை லட்சம் கொடுத்து வாடகைக்கு வசித்து வந்துள்ளார். சகாயராஜ் சினிமாவில் புரோடக்சன் துறையில் மேலாளராகப் பணியாற்றி வந்தவர் மேலும் இவர் பிரபல இயக்குனர் சுந்தர் சியின் பல்வேறு படங்களுக்கு தயாரிப்பு நிர்வாகியாக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மோசடியில் ஈடுபட்ட சகாயராஜ்

கடந்த சில வருடங்களாக செந்தில் வாடகை அளித்துவந்த சகாயராஜ் கடந்த சில மாதங்களாக வாடகை தருவதை நிறுத்தி உள்ளார். இதனால் நடிகர் செந்தில் அப்பார்ட்மெண்ட்டிற்கு நேரடியாக சேர்ந்து பார்த்துள்ளார். ஆனால், அப்போது சகாயராஜ், செந்திலை சந்திக்காமல் தலைமறைவாகி இருந்திருக்கிறார். இதனால் சந்தேகமடைந்த செந்தில் அப்பார்ட்மென்ட்டில் இருந்தவர்களிடம் விசாரித்துள்ளார். அப்போது பத்து அறைகள் கொண்ட அந்த கட்டிடத்தில் 7 அறைகளை மற்றவர்களுக்கு வாடகைக்கும் குத்தகைக்கும் விட்டு சகாயராஜ் பணம் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

-விளம்பரம்-

இதனால் அதிர்ச்சி அடைந்த செந்தில் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் சகாயராஜ் மீது புகார் அளித்திருந்தார் செந்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்த போலீசார் சகாயராஜ், மேல் வாடகைக்கு விட்டு பணம் வாங்கியதை உறுதி செய்தனர். மேலும், தலைமறைவாக இருந்த சகாயராஜையும் தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில் விருகம்பாக்கத்தில் தலைமறைவாக இருந்த சகாயராஜ் சமீபத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தற்போது சகாயராஜ் சிறையில் கம்பி எண்ணி கொண்டிருக்கிறார். செந்திலுக்கு சொந்தமான கட்டிடத்தில் இப்படி ஒரு மோசடி நடைபெற்றது சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Advertisement