“உலகம் முழுவதும் 52 விருது பெற்ற படத்திற்கு ஏன் தேசிய விருது தரவில்லை?” – எம்.பி கேள்வி.  

0
1159
- Advertisement -

மாமனிதன் திரைபடத்திற்கு ஏன் தேசிய விருது வழங்கப்படவில்லை. ஏன் இந்த பாகுபாடு மாணிக்கம் தாகூர் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார். 69 ஆவது வருட தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் வியாழக்கிழமை மாலை அறிவிக்கப்படுகின்றது. இதில் சிறந்த நடிகர், நடிகை, சிறந்த திரைப்படம் என பல பிரிவுகளில் விருது வாங்கும் வெற்றியாளர்கள் குறித்து பிரஸ்மீட்டில் அறிவித்திருந்தார்கள். அதில் சிறந்த நடிகருக்கான விருதை புஷ்பா படத்தில் நடித்த தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் வாங்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

சிறந்த நடிகைக்கான விருதை கங்குபாய் கதியாவாடி படத்தில் நடித்த நடிகை அலியா பட்டும், மிமி படத்தில் நடித்த நடிகை கீர்த்தி சனோன் ஆகியோருக்கும் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. பின் சிறந்த இசையமைப்பாளராக தேவிஸ்ரீ பிரசாத்திற்கு வழங்கப்படுகிறது. புஷ்பா படத்திற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது.

- Advertisement -

69 தேசிய விருது:

சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை விவசாயி படம் வென்று இருக்கிறது. இந்த படத்தை மணிகண்டன் இயக்கி இருக்கின்றார். இவர் ஏற்கனவே காக்கா முட்டை படத்திற்காக தேசிய விருது வாங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழ் ரசிகர்கள் பெரிதும் எரிப்பார்க்கப்பட்ட ஜெய் பீம், சார்பட்டா பரம்பரை, கர்ணன் ஆகிய படங்களுக்கு விருது எதுவும் கிடைக்கவில்லை.

தேசிய விருது வாங்கிய பிரபலங்கள்:

குறிப்பாக, விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் கொண்டாடப்பட்ட ஜெய் பீம் படத்திற்கு விருது கிடைக்காதது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.அது மட்டும் இல்லாமல் அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த லிஜோ மோலிக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடந்த ஆண்டு சூறரை போற்று படத்திற்காக சூர்யா தேசிய விருதை வாங்கி இருந்தது போல் இந்த ஆண்டும் வாங்குவார் என்று ரசிகர்கள் கூறியிருந்தார்கள்.

-விளம்பரம்-

ஆனால், ஜெய் பீம் படத்திற்கு எந்த ஒரு பிரிவிலும் விருது கிடைக்காதது குறித்து ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வருத்தத்துடன் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

மனிதன் திரைப்படம்:

தென்மேற்குப் பருவக்காற்று’, ‘நீர்ப்பறவை’, ‘தர்மதுரை’ போன்ற திரைப்படங்களை இயக்கிய சீனு ராமசாமியின் இயக்கத்தில் விஜய்சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் நடிப்பில் ‘மாமனிதன்’ திரைப்படம் வெளியானது. பெரும்பாலான எளிய மக்களின் கதைகளை கையில் எடுக்கும் இயக்குனர் சீனு ராமசாமி இப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இதற்க்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து இருந்தார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்த திரைப்படம் வெளியானது. இது குறித்து கருத்து தெரிவித்த எம்.பி மாணிக்கம் தாகூர் “உலகம் முழுவதும் 52 விருதுகளைப் பெற்ற தமிழ்த் திரைப்படமான ‘மாமனிதன்’ திரைபடத்திற்க்கு தேசிய விருது பாகுபாடு காட்டியுள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான உண்மை மிகுந்த ஏமாற்றமளிக்கிறது அனுராக் தாக்கூர் அவர்களே.சமூக நல்லிணக்கத்தைக் கொண்டாடும் தமிழ்த் திரைப்படத்திற்கு ஏன் இதுபோன்ற பாகுபாடுகளைக் காட்ட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Advertisement