விபத்தால் மஞ்சுமாவிற்கு நேர்ந்த கதி.. பார்த்தா நீங்களே பரிதாபபடுவீங்க..

0
13036
manjima-mohan
- Advertisement -

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ” அச்சம் என்பது மடமையடா” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன். இவர் மலையாளம் ,தெலுங்கு ,தமிழ் என பல மொழி திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். கேரளாவில் உள்ள பாலக்காட்டை பூர்விகமாக கொண்டவர். மஞ்சுமா மோகன் மலையாளத்து அழகி என்று தான் அழைப்பார்கள். மேலும், 1990 ஆம் ஆண்டிலிருந்தே குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் நடிக்க தொடங்கினார். அதோடு மஞ்சிமா மோகன் தந்தை ஒரு திரைப்பட ஒளிப்பதிவாளர்மற்றும் தாயார் ஒரு நடன கலைஞர் ஆவார். அதுமட்டும் இல்லைங்க மஞ்சிமா மோகன் அவர்களுக்கு நடிப்பின் மீது அதிக ஆர்வமுடையவர். அதோடு குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த நம்ம மஞ்சுமா மோகன் அவர்கள் பிரசாத் இயக்கத்தில் சீனிவாசனின் திரைக்கதையில் “ஒரு வடக்கன் செல்பி” என்ற மலையாள படத்தில் முதன் முறையாக கதாநாயகியாக அறிமுகமானார்.

-விளம்பரம்-
Image result for மஞ்சிமா மோகன்

அந்த படம் வெளியானதை தொடர்ந்துதான் மஞ்சுமா மோகனுக்கு தமிழில் கௌதம் மேனன் இயக்கத்தில், சிம்பு நடிப்பில் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது மட்டும் இல்லைங்க இந்த படத்தின் மூலம் மஞ்சுமா மோகன் அவர்கள் தமிழ் ரசிகர்களை ஒட்டுமொத்தமாக கட்டி இழுத்தார். தன்னுடைய முதல் படத்திலேயே பெரிய அளவு வரவேற்பை பெற்றார். ஆனால், அதற்குப் பின்னர் தமிழில் சில படங்களில் நடித்தார். தமிழில் நடிகை மஞ்சு மோகன் சத்திரியன், இப்படை வெல்லும், தேவராட்டம் என வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார். சிம்புவின் அச்சம் என்பது மடமையடா படத்தை தவிர மற்ற படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை, எனினும் இவரிடம் கைவசம் தற்போது நான்கு படங்கள் உள்ளன.

இதையும் பாருங்க : போலி கணக்கில் இருந்து மீரா செய்த பித்தலாட்டம்.. இறுதியில் வசமா மாட்டிகிட்டாரே..

- Advertisement -

தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் மஞ்சிமா மோகனுக்கு சமீபத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது என்ற தகவல் வெளியானது. இது குறித்த அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அது என்னன்னு பார்த்தா! அதாவது சில மாதங்களுக்கு முன்பு மஞ்சிமா மோகன் விபத்தில் சிக்கியுள்ளார். மேலும், அதற்கான புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும்,இது குறித்து மஞ்சுமா மோகன் கூறியது, எதிர்பாராத விபத்து ஒன்று என் வாழ்க்கையில் நடந்து விட்டது. மேலும், அதற்காக என் காலில் அடிபட்டதால் சிறு சிறு அறுவை சிகிச்சைகள் செய்தார்கள். அதனால் நான் இப்போது ஓய்வு நிலையில் இருக்கிறேன். முன்பெல்லாம் நீங்கள் வாழ்வில் எதிர்கொண்ட கடினமான விஷயங்கள் என்ன? என்று என்னிடம் கேட்டார்கள் .

-விளம்பரம்-

ஆனால், நான் அந்த மாதிரி எந்த நிகழ்வும் நடந்தது இல்லை என்று கூறினேன். ஆனால், இப்போது நிகழ்ந்து விட்டது. எனக்கு மருத்துவமனையில் படுத்த படுக்கையா இருப்பதற்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு. அது மட்டும் இல்லைங்க என்னுடைய வேலையும் இந்த விபத்தால் பாதிக்கப்பட்டது. அதே நேரத்தில் என்னை நானும் புரிந்து கொள்வதற்கு இது எனக்கு உதவியாக இருந்தது என்று நான் நினைத்துக்கொண்டேன். அதுமட்டுமின்றி ஒரு வலிமையான நபராகவும் என்னை மாற்றினேன். எல்லோரும் சொல்வார்கள், ஏதோ ஒரு காரணத்திற்காக தான் இந்த செயல் நடக்கிறது என்று அது என் வாழ்க்கையில் நிஜமாகி விட்டது, இதுவும் கடந்து போகும் என்று கூறினார். தற்போது அவர் கம்பியைப் பிடித்தபடி நடந்த இந்தப் படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார் பார்த்து மஞ்சிமா மோகன். ரசிகர்கள் செம ஃபீலிங் ஆயிட்டாங்க. விரைவில் குணமடைந்து வர வேண்டும் என பிரார்த்தனை செய்கிறார்கள் ரசிகர்கள்.

Advertisement