லியோ படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ் – மாமன்னன் படத்தை சுட்டிக்காட்டி கலாய்க்கும் ரசிகர்கள்.

0
489
- Advertisement -

லியோ படத்தை பார்த்து மாரி செல்வராஜ் கூறிய கருத்துக்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் லியோ குறித்த செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டும் இல்லாமல் பாக்ஸ் ஆபீசிலும் இடம் பெறும்.

-விளம்பரம்-

இறுதியாக வெளியான பீஸ்ட், வாரிசு ஆகிய படங்களில் பெரும் தோல்வியை தழுவியது. இருப்பினும் வசூல் ரீதியாக அந்த படங்கள் வெற்றி கண்டது. தற்போது விஜய் நடிப்பில் லியோ படம் வெளியாகி இருக்கிறது. மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து இருக்கின்றார்கள். இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக உருவாகி இருக்கிறது.

- Advertisement -

லியோ படம்:

தமிழகத்தில் மட்டும் 9 மணிக்கு வெளியாகி இருக்கிறது. பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் 4 மணி மற்றும் 5 மணிக்கு திரைப்படம் வெளியாகி இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் படத்தில் முதல் பாதியே தூள் கிளப்புகிறது என்றும் இரண்டாம் பாதியெல்லாம் வேற லெவல் என்றும் ரசிகர்கள் கூறி இருக்கிறார்கள். குறிப்பாக, படத்தில் விஜய் அன்பான தந்தையாகவும், வில்லன்களை வெறித்தனமாக வேட்டையாடும் மான்ஸ்டர் காட்சிகளிலும் பட்டையை கிளப்பி இருக்கிறார்.

மாரி செல்வராஜ் பதிவு;

மேலும், லியோ படத்தை பார்த்து திரை பிரபலங்கள் பலருமே பாராட்டி கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் முன்னணி இயக்குனர் மாரி செல்வராஜ் லியோ படத்தை பாராட்டி வாழ்த்து பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். ஆனால், ரசிகர்கள் மாரி செல்வராஜின் பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். காரணம், லியோ படத்தில் மிஸ்கின் அவர்கள் பன்றிகளை வளர்ப்பார்.

-விளம்பரம்-

ரசிகர்கள் கோபம்:

இருந்தாலும், அவர் கொலை, கொள்ளைகளை செய்யும் ஆளாக படத்தில் இருப்பார். ஆனால், மாமன்னன் படத்தில் பன்றிகளை வைத்து கதையை உருவாக்கிய இந்த மாரி செல்வராஜ் எப்படி லியோ படத்தை பார்த்து விட்டு பாராட்டி இருக்கிறார் என்று கோபத்துடன் கூறி வருகிறார்கள். அதிலும், சிலர் பன்னி கூட்டத்து மேல பாசம் இல்லையா என்று மாரி செல்வராஜை கிண்டலடித்து வருகிறார்கள். தற்போது மாரி செல்வராஜ் டீவ்ட் தான் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

லியோ வசூல்:

மேலும், உலகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் லியோ படத்தை மிக பிரம்மாண்டமாக கொண்டாடி வருகிறார்கள். விஜய்யின் லியோ படம் உலக அளவில் முதல் நாள் 130 கோடி வசூல் செய்து இருக்கிறது. தமிழகத்தில் முதல் நாள் 73 கோடி வசூல் செய்திருக்கிறது. இத்தனைக்கும் ஸ்பெஷல் சோ எதுவும் இல்லாமலே லியோ படம் வசூல் செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பின் இரண்டே நாளில் விஜயின் லியோ படம் 210 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது. இனி வரும் நாட்களிலும் லியோ படம் கண்டிப்பாக ஒரு மிகப்பெரிய வசூல் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement