உதயநிதிக்காக விட்டுக்கொடுத்த தனுஷ் மற்றும் விக்ரம் – மாமன்னன் ரகசியம் சொன்ன மாரி செல்வராஜ்

0
1183
mariselvaraj
- Advertisement -

உதயநிதிக்காக படத்தை தனுஷ்- விக்ரம் விட்டுக் கொடுத்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். ஆரம்பத்தில் இவர் ஒரு நடிகராக வேண்டும் என்ற கனவுடன் தான் சினிமாவுக்குள் வந்தார். பின் இவர் இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதன் பின் 2018 ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக மாரி செல்வராஜ் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார்.

-விளம்பரம்-

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்றதோடு மட்டும் இல்லாமல் பல்வேறு விருதுகளையும் பெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘கர்ணன்’. இந்த படத்தில் ரஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கௌரி கிஷன், நட்டி என்று பலர் நடித்து இருந்தார்கள். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்து இருந்தார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வேற லெவல் ஹிட் அடித்தது.

- Advertisement -

மாமன்னன் படம்:

தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் மாரி செல்வராஜ். இத்திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினிற்கு கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் வைகை புயல் வடிவேலு , பகத் பாசில் போன்ற முன்னணி நடிகர்களும் நடித்து வருகிறார்கள். இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

படம் குறித்த தகவல்:

தற்போது மாமன்னன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் ப்ரோடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. மேலும், இந்த படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. வருகிற ஜூன் மாதம் இந்த படம் திரையரங்கில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் உதயநிதிக்காக தனுஷ்-விக்ரம் செய்த காரியம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, சமீபத்தில் மாரி செல்வராஜ் அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார்.

-விளம்பரம்-

தனுஷ்-விக்ரம் செய்த செயல்:

அதில் அவர், உதயநிதி என்னை அழைத்து இதுதான் என்னுடைய கடைசி படம் என்று சொன்னார். நான் அப்போது துருவ் விக்ரம் மற்றும் தனுஷ் படங்களின் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு இருந்தேன். அதனால் உதயநிதி அவர்கள் தனுஷ் மற்றும் விக்ரம் இருவருடனும் தனிப்பட்ட முறையில் என்னுடைய கடைசி படத்தை மாரி செல்வராஜ் இயக்க வேண்டும் என்று பேசினார். அதற்கு இருவரும் மாமன்னன் படத்தை முதலில் இயக்க சம்மதம் தெரிவித்தார்கள். அதற்கு பிறகு தான் நான் மாமன்னன் படத்தை இயக்கினேன் என்று கூறினார்.

Advertisement