இந்த கேரக்டரில் நடிகனும் என்பது என் கனவு – பொன்னியின் செல்வன் குறித்து மீனா போட்ட உருக்கமான பதிவு.

0
423
meena
- Advertisement -

பொன்னியின் செல்வன் படம் குறித்து மீனா பதிவிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கும் பொன்னியின் செல்வன் படம் நாளை வெளியாக இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் மணிரத்தினம் தான் இயக்கி இருக்கிறார். பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக்க பலர் முயற்சித்து இருந்தார்கள்.அதை மணிரத்தினம் சாதித்து காட்டி இருக்கிறார். மேலும், பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வர இருக்கிறது.

-விளம்பரம்-
ponniyin

அதுமட்டும் இல்லாமல் மணிரத்னத்தின் திரைவாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக இந்த படம் தயாராகி இருக்கிறது. இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், கார்த்தி, ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார்.

- Advertisement -

இதையும் பாருங்க : பிரெஸ் மீட்ல எங்க சானக்கியா ரிப்போர்ட்டர் தான் அந்த கேள்விய கேட்டார், ஆனா மணிரத்னம் மலிப்பி விட்டு சென்று விட்டார் – ரங்கராஜ் பாண்டே.

நாளை ரிலீஸ் :

இந்த படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் வெளியிட இருக்கிறார்கள். இந்த படத்தில் ரவிவர்மன் ஒளிப்பதிவாளராகவும், தோட்டாதரணி கலை இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார்கள். ஏற்கனவே படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முழுமையாக நிறைவடைந்து விட்டது. இந்த படம் நாளை செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

150 நாட்களில் முடிந்த ஷூட்டிங் :

படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், சில வாரங்களுக்கு முன் தான் பிரம்மாண்டமாக படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடந்து முடிந்தது. தற்போது படத்தின் ப்ரோமோஷன் பணிகளை படக்குழு விறுவிறுப்பாக நடத்தி வருகிறது. அதோடு இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 500 கோடி என்று என்று கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தை 150 நாட்களிலேயே எடுத்து முடித்துள்ளார்.

மீனா போட்ட பதிவு :

இந்த படத்தை ரசிகர்கள் மாற்றுமல்லாது பிரபலங்களும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இப்படி ஒரு நிலையில் நடிகை மீனா ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் குறித்து தனது இன்ஸ்டாகிராமில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். ’பொன்னியின் செல்வன்’ படத்தில் உள்ள நந்தினி கேரக்டரில் நடிக்க வேண்டும் என்பது தனது கனவு என்று குறிப்பிட்டுள்ள மீனா, நந்தினி கேரக்டரில் நடிக்க ஐஸ்வர்யா ராய்க்கு வாய்ப்பு கிடைத்துள்ளது தனக்கு மிகவும் பொறாமையாக உள்ளது.

ரசிகர்கள் கமெண்ட்ஸ் :

முதன்முதலாக அவரை பார்த்து நானே பொறாமை பட்டுள்ளேன் என்று கூறியுள்ள மீனா படக்குழுவினர் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார். இதனை அடுத்து நந்தினியின்கேரக்டருக்கு மீனா அனைத்து விதத்திலும் பொருத்தமானவர் என்றும் இருப்பினும் அவருக்கு வாய்ப்பு கிடைக்காதது துரதிஷ்டம் என்றும் நீங்கள் நடித்து இருந்தால் மிகவும் அருமையாக இருந்து இருக்கும் என்றும் கமண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement