‘இதே தொடர்ந்து நடந்தா என்ன பண்றது’ – மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இருந்து விலகிய காரணம் குறித்து சொன்ன நடிகை.

0
995
meenatchi
- Advertisement -

மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இருந்து நடிகை மோக்‌ஷிதா வெளியேறியதற்கான காரணம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் விளங்குகின்றது. அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வருகிறது. இதனால் சமீபத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட தொடர் தான் மீனாட்சி பொண்ணுங்க.

-விளம்பரம்-

ஆண் துணை இல்லாமல் தன்னுடைய மூன்று பெண்களையும் கௌரவமாக சம்பாதித்து வளர்த்து வருபவர் தான் மீனாட்சி என்கிற அர்ச்சனா. இவர் வெள்ளி திரையில் பல படங்களில் நடித்திருக்கிறார். இந்த சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும், இந்த சீரியலில் 3 பெண்களில் ஒருவராக கதாநாயகியாக நடித்த மோக்‌ஷிதா. இவர் கன்னடத்தில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி தொடரில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். தமிழில் மீனாட்சி பொண்ணுங்க சீரியல் தான் இவருடைய முதல் சீரியல். இந்த சீரியல் ஆரம்பத்தில் இருந்து இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

- Advertisement -

ஆனால், திடீரென இவர் சீரியலில் இருந்து விலகியது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுகிறது. இந்நிலையில் இது குறித்து மோக்‌ஷிதா பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார். அதில் அவர், மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் நடிக்க என்னிடம் கேட்டபோது கன்னடத்தில் ஒரு சீரியல் செய்து கொண்டிருந்தேன் என்று சொன்னேன். செம்பருத்தி கன்னட வர்ஷன் நல்லா போய்க்கொண்டிருக்கிறது. பின் 15 நாள் கால்சீட்டு என்று பிரித்துக் கொடுத்து தான் இரண்டு சீரியலுமே கமிட்டாகி நடித்துக் கொண்டு வந்தேன். சீரியலுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. சீரியல் தொடங்கி கொஞ்ச நாள் நன்றாக தான் சென்று கொண்டிருந்தது.

ஆசை ஆசையா நடிக்க வந்தேன்

ஆனால், என்ன காரணம் என்று தெரியவில்லை திடீர் என்று கதை மாறுகிற மாதிரி தெரிந்தது. இதனால் எனக்கு உடன்பாடில்லை. கமிட் செய்கிறப்ப சொன்னதுக்கும் அதற்குப்பின் இயக்குனர் மாற்றுவதற்கும் எனக்கு பிடிக்கவில்லை. நான் இந்த சீரியலில் ஆசை ஆசையாக நடிக்க வந்தேன். இப்படி எல்லாம் நடந்தது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. ஆனாலும், அதை வெளிக்காட்டாமல் எல்லாத்தையும் பொறுத்துக் கொண்டு நடித்துக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் ஷூட்டிங் தேதியிலும் பிரச்சனை வந்தது. ஆரம்பத்தில் சொன்ன மாதிரி மாதம் 15 நாள் என்று நான் ஒதுக்கி தந்த படி ஷூட்டிங் அமையவில்லை.

-விளம்பரம்-

கன்னட சீரியல் சூட்டிங் பாதிக்கப்பட்டது

ஷூட்டிங் என்று சென்னைக்கு வரும்போது சில நாட்கள் எனக்கு சூட் இருக்காது. அந்த நாட்கள் எல்லாம் சும்மா தான் இருப்பேன். ஆனால், இங்கு இருந்து கிளம்பி பெங்களூரு போன மறுநாளே சூட்டிங் இருக்குது என்று வர சொல்லுவார்கள். இதனால் என்னோட கன்னட சீரியல் சூட்டிங் பாதிக்கப்பட்டது. அப்ப கூட அந்த சீரியலின் தயாரிப்பளார் எனக்கு ஆதரவாக இருந்தார்கள். அதனால் அந்த சீரியலுக்கான தேதிகளை கூட மீனாட்சி பொண்ணுங்க சீரியலுக்காக ஒதுக்கி கொடுத்து நடித்து கொடுத்தேன். ஏதோ ஒரு முறை, இரண்டு முறை இந்த மாதிரி நடந்தால் பரவாயில்லை.

இதே தொடர்ந்து நடந்து கொண்டு இருந்தால்

இதே தொடர்ந்து நடந்து கொண்டு இருந்தால் என்ன செய்ய முடியும். அதனால்தான் சீரியல் இருந்து வெளியேறினேன். ஆனால், நான் சீரியலில் இருந்து வெளியேறின மறுநாளே அந்த கதாபாத்திரத்திற்கு புதுசாக ஒரு ஆர்டிஸ்ட் கொண்டு வந்ததை பார்த்து ரொம்ப வருத்தமாக இருந்தது. ஒரு ஆர்டிஸ்ட் வெளியேறினால் எப்படி அடுத்த நாளே ரீப்ளேஸ் செய்ய முடியும்? என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், அது இங்கு நடந்தது. இதை பார்த்ததும் தான் எல்லாம் பிளான் பண்ணி செய்தார்கள் என்று எனக்கு தோன்றியது என்று கூறினார்.

சீரியல் நடிகர்கள் சொன்னது :

இதனை அடுத்து மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் நடித்த சிலரிடம் இது குறித்து விசாரித்த போது, மோக்ஷிதா நல்ல பொண்ணு தான். இந்த சீரியலில் அவர்கள் நல்ல ஆர்வத்தோடு தான் நடித்திருந்தார்கள். கால்ஷீட் பிரச்சினை காரணமாக தான் அந்த பொன்னால் இந்த சீரியலில் நடிக்க முடியவில்லை. அதற்கு காரணம் நடிகை அர்ச்சனா. ஷூட்டிங் கொடுத்த தேதிகளில் அப்பப்ப பிரச்சினை வரும். அவர்கள் சீனியர் நடிகை என்பதால் அவர்களிடம் எதுவும் பேச முடியவில்லை. அந்த தேதிகளை சரி செய்ய மற்ற நடிகர்களுடைய தேதிகளை மாற்றினார்கள். இதனால் தான் பிரச்சனை ஆரம்பம் என்று கூறியிருந்தார்கள்.

Advertisement