‘எங்கிட்ட சொன்ன மாதிரி கதை நகரவில்லை’ – மீனட்சி பொண்ணுங்க தொடரில் இருந்து விலகிய முக்கிய நடிகை.

0
837
Menatchi
- Advertisement -

மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இருந்து நடிகை அர்ச்சனா விலகி இருக்கும் தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட தொடர் தான் மீனாட்சி பொண்ணுங்க. ஆண் துணை இல்லாமல் தன்னுடைய மூன்று பெண்களையும் கௌரவமாக சம்பாதித்து வளர்த்து வருபவர் தான் மீனாட்சி என்கிற அர்ச்சனா.

-விளம்பரம்-

இந்த சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சீரியல் நன்றாக சென்று கொண்டு இருக்கும் போது சீரியலின் நாயகி சக்தி கதாபாத்திரத்தில் நடித்த மோக்ஷிதா சீரியலில் இருந்து விலகி விட்டார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது சீரியலில் சக்தியின் கணவருக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது. மனமில்லாமல் சக்தியும் ஆரியனும் இருக்கிறார்கள். சக்தி -ஆரியன் பிரிந்து விடுவார்களா? சேர்வார்களா? என்ற பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

- Advertisement -

மீனாட்சி பொண்ணுங்க சீரியல்:

மேலும் இந்த சீரியலில் மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை அர்ச்சனா. இவர் சினிமாவில் பல படங்களில் நடித்திருக்கிறார். அதற்கு பிறகு வாய்ப்புகள் குறைய தொடங்கிய உடன் சின்னத்திரை பக்கம் வந்தார். பின் இடையில் இவர் சின்னத்திரையில் இருந்து விலகி இருந்தார். தற்போது மீனாட்சி பொண்ணுங்க சீரியலின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்திருக்கிறார். இந்த சீரியல் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது. ஆனால், அர்ச்சனா திடீரன்று சீரியலில் இருந்து விலகி இருக்கும் தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை அர்ச்சனா அளித்த பேட்டி:

இந்த நிலையில் இது தொடர்பாக நடிகை அர்ச்சனா பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். அதில் அவர்,
இந்த மீனாட்சி பொண்ணுங்க சீரியல் கன்னட வெர்ஷன் ‘புட்டகன்ன மக்களு’ ஜீ கன்னடா சேனலில் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த சீரியல் அங்கு பயங்கர ஹிட் சீரியல். அந்த சீரியலின் கதையும், அந்த அம்மா கதாபாத்திரமும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அதே சீரியலின் தமிழ் வெர்ஷனுக்கு என்னை கேட்டு அணுகினார்கள். ஏற்கனவே பிடித்திருந்த கதை என்பதால் உடனே நான் சம்மதித்து விட்டேன். மேலும், கன்னட வர்ஷன் பிடித்திருந்தால் தமிழும் அதே மாதிரி தான் கதை நகரும் என்று நம்பி சம்மதித்தேன்.

-விளம்பரம்-

சீரியல் குறித்து சொன்னது:

ஆரம்ப காலத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், நாட்கள் செல்லச் செல்ல சீரியலின் போக்கையும் என்னுடைய அம்மா கதாபாத்திரமும் நகர்வது குறித்து அதிர்ச்சி உண்டாக்கியிருந்தது. அந்த அதிருப்தியினால் தான் கொஞ்ச நாளாகவே சீரியல் இருந்து என்னை நீக்கிவிடுங்கள் என்று கேட்டுக் கொண்டே தான் இருந்தேன். ஆனால், சேனல் தரப்பு தான் பல காரணங்களை சொல்லி வெளியேறிவிடாமல் வைத்திருக்கிறார்கள்.

சீரியலில் இருந்து வெளியேற காரணம்:

கதையின் நகர்வு பிடிக்கவில்லை. இப்படி ஒரு ப்ராஜெக்ட்டில் தொடர்ந்து இருக்கணுமா? என்ற கேள்வி எனக்குள் இருக்கிறது. செய்கிற வேலையை பிடித்து செய்ய வேண்டும். அதுதான் எல்லோருக்குமே நல்லது. அதனால் நான் இந்த சீரியலில் இருந்து வெளியேறி விட்டேன். எனக்கு பதிலாக வேறு ஒரு நடிகையை செய்து கொள்ளுங்கள் என்று ஏற்கனவே சீரியல் இயக்குனரிடம் சொல்லிவிட்டேன் என்று கூறியிருந்தார்.

Advertisement