பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்தேனா ? கார் கண்ணாடி உடைக்கப்பட்டது குறித்து பிரபல நடிகர் விளக்கம்.

0
574
meesai
- Advertisement -

பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்ததால் நடிகர் மீசை ராஜேந்திரனின் கார் கண்ணாடியை உடைத்து தாக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது நடந்த சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ளார் நடிகரும் அரசியல் வாதியுமான மீசை ராஜேந்திரன். சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் மீசை ராஜேந்திரன். இவர் படங்களில் குணசித்திர வேடங்களிலும், வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து இருக்கிறார். இவர் நெல்லை மாவட்டம் முக்கூடல் பகுதியை சேர்ந்தவர். தற்போது இவர் சென்னை சூளைமேட்டில் வசித்து வருகிறார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மீசை இராஜேந்திரன் தன்னுடைய சொந்த ஊரில் நடந்த நிகழ்ச்சிக்காக வந்திருக்கிறார். அப்போது தான் முத்துமாரியம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய குடும்பத்துடன் சென்றிருக்கிறார். ஏற்கனவே முத்துமாரியம்மன் கோவில் அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு கோவில் பெயரைச் சொல்லி சிலர் பணமோசடி முறைகேடு செய்து இருக்கிறார்கள்.

- Advertisement -

ராஜேந்திரன் தொடர்ந்த பொதுநல வழக்கு:

இதை நடிகர் மீசை ராஜேந்திரன் மதுரை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்து இருந்தார். மேலும், இது தொடர்பாக பல்வேறு தீர்ப்புகள் ராஜேந்திரனால் பெறப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் நீதிமன்ற தீர்ப்பை மீறி யாரிடமும் அனுமதி பெறாமல் கோவிலை புனரமைக்கும் பணியில் சிலர் ஈடுபட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் கோவிலுக்கு சென்ற ராஜேந்திரன் அவர்கள் வெள்ளை அடிப்பதை பார்த்து கேள்வி கேட்டு இருக்கிறார்.

கோவிலில் நடந்த சம்பவம்:

அதுமட்டும் இல்லாமல் அங்கு நடந்த சம்பவங்கள் குறித்து நீதிமன்ற தீர்ப்பு மற்றும் முன் அனுமதி பெறாமல் நடத்துவது குறித்தும் கேள்வி கேட்டு இருக்கிறார். அதற்கு அங்கு இருந்தவர்களுக்கும் இவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. இதனை அடுத்து மீசை ராஜேந்திரன் அவர்கள் தன்னை தாக்க முயற்சித்ததாகவும், நீதிமன்ற தீர்ப்பை மீறி செயல்படுவதாகவும் கூறி முக்கூடல் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

ராஜேந்திரன் அளித்த புகார்:

பின் இவர் தன் ஊருக்கு திரும்பி கொண்டிருந்த நிலையில் சொக்கலான்புரம் மெயின் ரோடு அருகே குடும்பத்தினருடன் காரில் வந்த போது ஒரு சிலர் வழிமறித்து காரின் பின்புற கண்ணாடியை கல்வீசி உடைத்து தங்களை தாக்க முயற்சித்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடிகர் மீசை ராஜேந்திரன் புகார் அளித்து இருக்கிறார். அந்த மனுவில் அவர் கூறி இருந்தது, எனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை.

மனுவில் ராஜேந்திரன் கூறி இருந்தது:

ஊருக்கு வரும் போது பிரச்சனை வரும் என மதுரை உயர் நீதிமன்றத்தில் காவல் பாதுகாப்பிற்கு ஆணை வாங்கி உள்ள நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனால் என் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும், இது தொடர்பாக நடிகர் மீசை ராஜேந்திரன் பேட்டி அளித்து இருக்கிறார். தற்போது இது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement