பொன்னியின் செல்வன் நாவலை படித்தவர்கள் வச்சி செய்யும் நெட்டிசன்கள் – வைரலாகும் memesகள் இதோ.

0
524
ponniyin
- Advertisement -

மிக பிரமாண்டமாக பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக இயக்குநர் மணிரத்னம் இயக்கி இருக்கிறார். இயக்குனர் மணிரத்னம் எப்போதும் வித்யாசமான கதைகளை இயக்கி உலகிற்கு கொடுப்பதில் கைத்தேர்ந்தவர்.இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் தற்போது இயக்குநர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக இயக்கி இருக்கிறார். இந்த கதையை பல பேர் முயற்சி செய்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

ஆனால், அதை மணிரத்னம் தான் சாதித்து காட்டி இருக்கிறார். மேலும், பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வர இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் மணிரத்னத்தின் திரைவாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது.இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், கார்த்தி, ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.

- Advertisement -

இதையும் பாருங்க : ஆனந்த் மஹிந்திரா பதிவிட்ட டீவ்ட்க்கு லைகா நிறுவனம் கொடுத்த பதில் – என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க.

ரசிகர்களிடம் வரவேற்ப்பு :

இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தில் ரவிவர்மன் ஒளிப்பதிவாளராகவும், தோட்டாதரணி கலை இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார்கள்.அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த பொன்னியின் செல்வன் படம் இன்று பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. நாவலை படித்தவர்கள், படிக்காதவர்கள் என அனைவரையுமே சந்தோசப்படுத்தும் வகையில் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

-விளம்பரம்-

ஐந்து பாகங்கள் கொண்ட நாவல் :

70 ஆண்டு கால எதிர்பார்ப்பு இன்று நிறைவேறியிருக்கிறது. தமிழ் சினிமாவின் பெருமையை வேறு ஒரு இடத்திற்கு கொண்டு சென்று விட்டார் என்று சொல்லலாம். மேலும், தமிழ் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் உலக சினிமா ரசிகர்களும் பொன்னியின் செல்வன் படத்தை கொண்டாடி வருகின்றனர். 2500 பக்கங்கள் கொண்ட ஐந்து பாகங்கள் கொண்ட ஒரு நாவலை இரண்டு பாகமாக படம் எடுப்பது என்பது சவாலான ஒன்று. இதை தற்போது மணிரத்தினம் சாதித்து காட்டியிருக்கிறார்.

நாவலை படத்திவர்கள் என்ன சொல்கிறார்கள் :

நாவலை படித்தவர்கள், படிக்காதவர்கள் என அனைவரையுமே சந்தோசப்படுத்தும் வகையில் படத்தை கொடுத்திருக்கிறார். மணிரத்தினத்தை தவிர இதை யாராலும் செய்து காட்ட முடியாது என்ற அளவிற்கு கதை இருக்கிறது. ஆனாலும், ஒரு சில பொன்னியின் செல்வன் வாசகர்கள் புத்தகத்தில் இருந்த பல விஷயங்கள் படத்தில் மாற்றப்பட்டு இருப்பதாக கூறி வருகின்றனர். அதிலும் குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன் இந்த படத்தின் ப்ரோமோ ஒன்று வெளியாகி இருந்தது.

கேள்வி எழுப்பும் PS வாசகர்கள் :

அதில், ஆதித்ய கரிகாலன், அருள்மொழிவர்மன், வந்திய தேவன் மூவருமே ஒரு காட்சியில் வருவது போல காண்பிக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்த பொன்னியின் செல்வன் வாசகர்கள், இவர்கள் மூவருமே ஒரே காட்சியில் வருவது எப்படி சாத்தியம்? பொன்னியின் செல்வன் கதையில் மூவருமே சேர்ந்தது போல் ஒரு காட்சியில் கூட இல்லை. ஆதித்ய கரிகாலன் காஞ்சிபுரத்தை ஆண்டபோது அவருடைய தம்பி அருள்மொழி வர்மனும், தங்கை குந்தவியும் வேறு ஒரு இடத்தில் இருந்தார்கள்.

வச்சி செய்யும் நெட்டிசன்கள் :

ஆதித்ய கரிகாலன் இறந்த பிறகு தான் அருள்மொழிவர்மன், குந்தவை வருகிறார்கள். அப்போது கூட வந்திய தேவன் அங்கு இல்லை. ஆரம்பத்தில் ஆதித்ய கரிகாலனுடன் வந்திய தேவன் இருக்கிறார். ஆனால், அருள்மொழி வரும் காட்சிகள் எதுவும் இல்லை. அதே போல் நந்தினி- அருள் மொழி வர்மன் வரும் காட்சிகளும் கதையில் இல்லை. இதெல்லாம் எப்படி சாத்தியம்? என்று கேள்விகளை எழுப்பி வந்தனர். இப்படி ஒரு நிலையில் பொன்னியின் செல்வன் வாசர்களை நெட்சன்கள் சிலர் வச்சி செய்து வருகின்றனர்.

Advertisement