பார்ட் 1லேயே இறந்த முக்கிய கதாபாத்திரம் – மெட்டி ஒலி பார்ட் 2வில் நடிப்பது யார் யார் தெரியுமா ?

0
2822
- Advertisement -

மெட்டிஒலி 2 சீரியல் குறித்து வெளியாகி இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
90 காலகட்டத்தில் மக்கள் மத்தியில் பிரபலமான சீரியல்களில் ஒன்று மெட்டி ஒலி. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் பார்த்து ரசித்து மகிழ்ந்த சீரியல் தான் மெட்டி ஒலி. அதிலும் ‘அம்மி அம்மி அம்மி மிதித்து என்ற பாடல் இன்றளவும் மக்கள் மத்தியில் ஒலித்துக் கொண்டு தான் இருக்கின்றது.

-விளம்பரம்-

2002 ஆம் ஆண்டு சன் டிவியில் தான் இந்த தொடர் ஒளிபரப்பப்பட்டது. இந்த சீரியலை திருமுருகன் அவர்கள் இயக்கினார். ஆண்டுகள் பல கடந்தாலும் தற்போது வரை மக்கள் இந்த சீரியலை பற்றி பேசிக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஐந்து சகோதரிகளின் வாழ்க்கை கதை தான் மெட்டி ஒலி சீரியல். இந்த தொடரை இயக்கிய திருமுருகன் அவர்கள் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

- Advertisement -

மெட்டி ஒலி சீரியல்:

மேலும், இந்த தொடரின் டைட்டில் சாங் அம்மி அம்மி மிதித்து என்ற பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக தான் இருக்கிறது. இந்த தொடர் முடிந்தும் இரண்டு மூன்று முறை மறுஒளிபரப்பும் செய்துவிட்டார்கள். அப்போதும் சீரியலில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. இந்த நிலையில் மெட்டி ஒலி சீரியலின் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கும் செய்தி சமீப காலமாக சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

நடிகர்கள் அளித்த பேட்டி:

இந்நிலையில் மெட்டிஒலி 2 குறித்து மெட்டிஒலி முதல் சீசனில் நடித்த சில பேர் சமீபத்தில் பேட்டி அளித்திருக்கிறார்கள். அதில் அவர்கள், மெட்டி ஒலி 2 சீரியல் குறித்து ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை நடந்து கொண்டுதான் இருக்கிறது. சிலரிடம் பேசி இருக்கிறார்கள். ஆனால், யாரெல்லாம் நடிக்கப் போகிறார்கள் என்பது இப்போது வரைக்கும் தெரியவில்லை. டெல்லி குமார் சாரை பொறுத்தவரை முதல் சீசனில் இறந்துவிட்ட மாதிரி காட்டிருப்பார்கள்.

-விளம்பரம்-

மெட்டி ஒலி 2 சீரியல்:

அதனால் அவர் இரண்டாவது சீசனில் இருப்பாரா? என்று தெரியவில்லை. இன்னும் சில மாதங்களில் இந்த தொடர் குறித்த தகவல்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. சினிமாவில் எப்படியோ சீரியல்களைப் பொறுத்தவரை ஹிட்டான சீரியல்கள் அடுத்த சீசன்கள் வந்தால் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி கிடைப்பதில்லை என்பது தான் எதார்த்தம்.

சீரியல் குறித்து சொன்னது:

சித்தி, பாரதி கண்ணம்மா தொடர்கள் எல்லாம் முதல் சீசன் அளவிற்கு பெரிய அளவு கிடைக்கவில்லை. ஆனால், இயக்குனர் திருமுருகன் ரசிகர்களை கவரும் வகையில் ஏதாவது ஒன்று கொடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவர் மீண்டும் இந்த சீரியலில் சென்டிமென்டை கொண்டு வந்து எல்லோர் மனதையும் கவருவார். கூடிய விரைவிலே இது பற்றி தெரியவரும் என்று கூறி இருக்கிறார்கள்.

Advertisement