-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

விரைவில் வரும் மெட்டி ஒலி 2, இயக்குனர் திருமுருகன் இல்லையாம். காரணம் இது தான்.

0
155

மெட்டி ஒலி சீரியலின் இரண்டாம் பாகம் விரைவில் துவங்க இருக்கும் நிலையில் தற்போது இரண்டாம் பாகம் குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது. 90 காலகட்டத்தில் மக்கள் மத்தியில் பிரபலமான சீரியல்களில் ஒன்று மெட்டி ஒலி. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் பார்த்து ரசித்து மகிழ்ந்த சீரியல் தான் மெட்டி ஒலி. அதிலும் ‘அம்மி அம்மி அம்மி மிதித்து என்ற பாடல் இன்றளவும் மக்கள் மத்தியில் ஒலித்துக் கொண்டு தான் இருக்கின்றது.

-விளம்பரம்-

2002 ஆம் ஆண்டு சன் டிவியில் தான் இந்த தொடர் ஒளிபரப்பப்பட்டது. இந்த சீரியலை திருமுருகன் அவர்கள் இயக்கினார். ஆண்டுகள் பல கடந்தாலும் தற்போது வரை மக்கள் இந்த சீரியலை பற்றி பேசிக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஐந்து சகோதரிகளின் வாழ்க்கை கதை தான் மெட்டி ஒலி சீரியல். இந்த தொடரை இயக்கிய திருமுருகன் அவர்கள் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மெட்டி ஒலி சீரியல்:

மேலும், இந்த தொடரின் டைட்டில் சாங் அம்மி அம்மி மிதித்து என்ற பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக தான் இருக்கிறது. இந்த தொடர் முடிந்தும் இரண்டு மூன்று முறை மறுஒளிபரப்பும் செய்துவிட்டார்கள். அப்போதும் சீரியலில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் இந்த தொடரின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதை உறுதி செய்யும் விதமாக மெட்டி ஒலி சீரியல் நடிகைகள் ஒன்றாக சந்தித்து கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

மெட்டி ஒலி முதல் பாகத்தை  சினி டைம் நிறுவனத்தின் சார்பில் சித்திக் தயாரித்து இருந்தார்.  மெட்டி ஒலி தொடருக்கு பின்னர் ‘திரு பிக்சர்ஸ்’; என்கிற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி விட்டார். இந்த தயாரிப்பில் விரைவில் ஒரு சீரியலையும் தயாரிக்க இருக்கிறார். எனவே ‘மெட்டி ஒலி’ 2 வரும்பட்சத்தில் அந்தத் தொடரை திருமுருகன் இயக்க மட்டும் செய்வாரா என்கிற கேள்வி எழுந்தது.

-விளம்பரம்-

இரண்டாம் பாகம் :

இப்படி ஒரு நிலையில் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி இருக்கிறது. ‘மெட்டி ஒலி 2’ சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாகப் போகிறது என்பது நிஜம்தான். அதேநேரம் தொடரை முதல் பாகத்தைத் தயாரித்த அதே ‘சினி டைம்ஸ்’ நிறுவனம்தான் தயாரிக்கிறது. ஆனால் தொடரை இயக்கப் போவது திருமுருகன் இல்லை. அவருக்குப் பதிலாக இயக்குநர் விக்ரமாதித்யன் ‘மெட்டி ஒலி’ இரண்டாவது பாகத்தை இயக்கவிருக்கிறார்’ என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

சீசன் 2 சீரியல் குறித்து ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை நடந்து கொண்டுதான் இருக்கிறது. சிலரிடம் பேசி இருக்கிறார்கள். ஆனால், யாரெல்லாம் நடிக்கப் போகிறார்கள் என்பது இப்போது வரைக்கும் தெரியவில்லை. டெல்லி குமார் சாரை பொறுத்தவரை முதல் சீசனில் இறந்துவிட்ட மாதிரி காட்டிருப்பார்கள்.அதனால் அவர் இரண்டாவது சீசனில் இருப்பாரா? என்று தெரியவில்லை. இன்னும் சில மாதங்களில் இந்த தொடர் குறித்த தகவல்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news