-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

சீரியலை விட்டு போக இது தான் காரணம்- மனம் திறந்த மெட்டி ஒலி சீரியல் நடிகர் விஷ்வா

0
574

தன்னை குறித்த வதந்திகளுக்கு மெட்டி ஒலி சீரியல் விஷ்வா முற்றுப்புள்ளி வைத்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் 90 காலகட்டத்தில் மக்கள் மத்தியில் பிரபலமான சீரியல்களில் ஒன்று மெட்டி ஒலி. இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் பார்த்து ரசித்து மகிழ்ந்த சீரியல். அதிலும் ‘அம்மி அம்மி அம்மி மிதித்து என்ற பாடல் இன்றளவும் மக்கள் மத்தியில் ஒலித்துக் கொண்டு தான் இருக்கின்றது. 2002 ஆம் ஆண்டு சன் டிவியில் தான் இந்த தொடர் ஒளிபரப்பப்பட்டது.

-விளம்பரம்-

இந்த சீரியலை திருமுருகன் அவர்கள் இயக்கி இருந்தார். ஆண்டுகள் பல கடந்தாலும் தற்போது வரை மக்கள் இந்த சீரியலை பற்றி பேசிக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஐந்து சகோதரிகளின் வாழ்க்கை கதை தான் மெட்டி ஒலி சீரியல். இந்த தொடரின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதை உறுதி செய்து இருக்கிறர்கள். இதனால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. மேலும், இந்த மெட்டி ஒலி சீரியலில் செல்வம் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவரை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள்.

மெட்டி ஒலி நடிகர் விஷ்வா:

இவர் தனது நடிப்பினால் அனைவரையும் கட்டிப் போட்டவர். இவரது உண்மையான பெயர் விஸ்வநாதன். தனது கல்லூரி படிப்பு முடித்த உடன் இவர் சின்ன சின்ன நாடகங்களில் நடித்து வந்தார். அதன் மூலம் தான் இவருக்கு சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மெட்டி ஒலி சீரியல் மூலம் மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார் விஷ்வா. அதன் பின்னர் இவர் தொழிலதிபரின் மகளை திருமணம் செய்து கொண்டார். மெட்டி ஒலி சீரியலுக்கு பின் நடிகர் விஸ்வநாதன் கொஞ்சம் இடைவெளி எடுத்துக் கொண்டார்.

விஷ்வா குறித்த தகவல்:

-விளம்பரம்-

கடைசியாக இவர் சன் டிவியில் ஒளிபரப்பான பொன்னூஞ்சல் சீரியலில் நடித்தார். இந்த சீரியலில் மூலம் மக்கள் மத்தியில் மீண்டும் இடம் பிடித்தார் என்று சொல்லலாம். அதற்கு பிறகு இவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்தது. இவர் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்தார். ஆனால், இவர் எதிர்பார்த்த அளவிற்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்காததால் இவருக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. அதற்கு பின் இவர் மீடியாவை விட்டு விளக்கினார். தற்போது நடிகர் விஸ்வநாதன் அவர்கள் ஒரு கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார் என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-

நடிகர் விஷ்வா பேட்டி:

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் விஷ்வா, திடீரென்று சீரியல் இருந்து காணாமல் போகவில்லை. மெட்டிஒலி சீரியலுக்குப் பிறகு இன்னொரு மெட்டிஒலி வேணும் என்று நினைத்தேன். அட்லீஸ்ட் இன்னொரு மெட்டி ஒலி ஸ்டாண்டில் ஒன்று இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். அதனால்தான் கொஞ்சம் கொஞ்சமாக நடிப்பதில் இருந்து குறைத்துக் கொண்டேன். எல்லா சீரியலும் மெட்டி ஒலி ஆகும் என்று சொல்ல முடியாது. எல்லா சினிமாவும் பாகுபலி ஆக முடியாது. அந்த மாதிரி இருந்தால் நன்றாக இருக்கும் நினைத்தேன். அதோடு எனக்கு வேறு சில வேலைகளும் இருந்ததால் அதில் கவனம் செலுத்தி இருந்தேன்.

சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி:

சோசியல் மீடியாவில் நிறைய என்னைப்பற்றி செய்திகள் வருவதை பார்த்திருக்கிறேன். நான் மூட்டை எல்லாம் தூக்கி இருக்கிறேன். நான் காசுக்காக கஷ்டப்பட்டு பிச்சை எடுக்கிறேன், செத்து போயிட்டேன், சினிமா வாய்ப்பில்லாததால் நான் செத்துப் போயிட்டேன் என்று சொல்லி இருக்காங்க. நான் ஏதோ சினிமா வாய்ப்பு தேடி ப்ரொடியூசர் வீடு வீடா போய் நின்றிருந்தேன் என்றெல்லாம் சொல்லிருக்காங்க. நான் என்னைக்குமே சீரியல் வாய்ப்பே தேடி போனது கிடையாது. நான் எங்க போய் சினிமா வாய்ப்பு தேட போகிறேன். அதெல்லாம் பார்க்கும்போது எனக்கு வேடிக்கையாக இருந்தது. நான் மீண்டும் சீரியலில் நடிக்க வர வாய்ப்புகள் இல்லை. என்னுடைய பிசினஸ்லியே நேரம் சரியாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news