கடைசி நாள் நடந்த சோகம் – மெட்டி ஒலி சீரியல் நடிகைகளின் பேட்டி.

0
8694
mettioli kaveri
- Advertisement -

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் பார்த்து ரசித்து மகிழ்ந்த சீரியல் என்றால் அது மெட்டி ஒலி தான். அதிலும் ‘அம்மி அம்மி அம்மி மிதித்து’ என்ற பாடல் இன்றளவும் மக்கள் மத்தியில் ஒலித்துக் கொண்டு தான் இருக்கின்றது. 2002 ஆம் ஆண்டு சன் டிவியில் தான் ஒளிபரப்பப்பட்டது. இந்த சீரியலை திருமுருகன் அவர்கள் இயக்கினார். இந்த சீரியலில் டெல்லி குமார், காவேரி, காயத்திரி, வனஜா, உமா, ரேகா, சேத்தன், நீலிமா ராணி,போஸ் வெங்கட் மற்றும் திருமுருகன் போன்ற பல நடிகர்கள் நடித்துள்ளார். ஆண்டுகள் பல கடந்தாலும் தற்போது வரை மக்கள் மெட்டி ஒலி சீரியலை பற்றி பேசிக் கொண்டு தான் உள்ளார்கள்.

-விளம்பரம்-

ஐந்து பெண் பிள்ளைகளைப் பெற்ற தந்தையும் அவரது குடும்பமும் அதற்குள் நடக்கும் நிகழ்வுகளையும் மையமாக வைத்து தான் மெட்டி ஒலி. இந்த சீரியல் கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு மேல் ஒளிபரப்பாகி இருந்தது. இந்த சீரியல் பட்டி தொட்டி எல்லாம் ஹிட்டானது. மெட்டி ஒலி சீரியலில் நடித்த நடிகர்கள் எல்லோருமே மிகப் பெரிய அளவில் பிரபலமானர் என்று சொல்லலாம். இந்த சீரியலை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறக்க மாட்டார்கள்.

- Advertisement -

தற்போது இந்த க்வாரன்டீன் நாட்களில் திரும்ப சன் டிவியில் மெட்டி ஒலி சீரியலை ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் மெட்டி ஒலி சீரியலில் நடித்த நடிகைகள் எல்லாம் சேர்ந்து வீடியோ கால் மூலம் பேட்டி ஒன்று அளித்திருந்தார்கள். அதில் அவர்கள் மெட்டி ஒலி சீரியல் போது கடைசி நாள் நடந்த நிகழ்வுகளை கூறி உள்ளார்கள். அதில் அவர்கள் கூறியிருப்பது, மெட்டி ஒலி சீரியல் முடிந்த கடைசி நாள் அன்னைக்கு நாங்கள் ஐந்து பேருமே அப்படி எழுந்தோம்.

எங்களை பார்க்கக் கூடாது என்று கடைசி ஷாட் எடுத்து விட்டு திருமுருகன் சார் அந்த இடத்தை விட்டு போயிட்டாரு. எங்களால அழுகையை நிறுத்தவில்லை. பேக்கப் என்று சொல்லிவிட்டு எல்லாம் கிளம்பி போறாங்க. எங்களால லோக்கேஷன் விட்டு வரவே முடியல. அந்த இடத்திலேயே நாங்க 5 பேரும் அழுந்து கொண்டே இருந்தோம். அந்த நிகழ்வை தற்போது கூட மறக்க முடியாது என்று கூறினார்கள்.

-விளம்பரம்-
Advertisement