உருக்கமுடன் வேண்டுகோள் வைத்த விக்ரமன் – டாக்டர் பட்டாளத்தையே வீட்டிற்கும் அனுப்பிய முதலமைச்சர். விக்ரமன் உருக்கம்.

0
265
Mkstalin
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்தவர் விக்ரமன். இவர் இயக்குனர் பார்த்திபனிடம் உதவி இயக்குனராக பணி புரிந்திருந்தார். இவருடைய படங்கள் எல்லாம் குடும்பப்பாங்கான கதை மற்றும் பெண்களின் மீதான சமூக அக்கறையை மையமாகக் கொண்டது. மேலும், இவர் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த புதுவசந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் திரை உலகிற்கு அறிமுகம் ஆகியிருந்தார். இவருடைய இயக்கத்தில் வந்த படங்கள் இன்றும் ரசிகர்களின் ஃபேவரட் ஆக இருக்கிறது.

-விளம்பரம்-

கடைசியாக இவர் 2014 ஆம் ஆண்டு வெளியான நினைத்தது யாரோ என்ற படத்தை தான் இயக்கியிருந்தார். அதற்கு பிறகு எந்த படத்தையும் இயக்கவில்லை.இது குறித்து ரசிகர்கள் பலருமே கேள்வி எழுப்பினார்கள். பின் இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் விக்ரமன், என்னுடைய மனைவிக்கு உடல்நலம் சரியில்லை. அவரை கவனித்துக் கொள்ள வேண்டிய கடமையும் பொறுப்பும் எனக்கு இருக்கிறது.

- Advertisement -

இதனால் தான் நான் படங்களை இயக்கவில்லை என்று கூறியிருந்தார். இதனை அடுத்து பலருமே விக்ரமனின் மனைவிக்கு என்ன ஆனது? என்று கேள்வி எழுப்பினார்கள். இந்த நிலையில் தற்போது விக்ரமனின் மனைவிக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சினை குறித்த தகவல் தான் தற்போது வெளியாகி இருக்கிறது.விக்ரமனின் மனைவி பெயர் ஜெயப்பிரியா. இவர் குச்சிப்புடி நடன கலைஞர். இவர் இதுவரை சுமார் 4000 மேடைகளில் நடனம் ஆடி இருக்கிறார்.

இப்படி இருக்கும் நிலையில் இவருக்கு உடலில் சில பிரச்சனைகள் ஏற்பட்டது. இதனால் இவருக்கு சிகிச்சை அளித்தார்கள். ஆனால், அளிக்கப்பட்ட சிகிச்சை(medical error) தவறாக கொடுக்கப்பட்டது. இதனால் ஐந்து வருடங்களுக்கு மேல் விக்ரமனின் மனைவி ஜெயபிரியா படுத்த படுக்கையாக இருந்தார். அவரால் தன்னுடைய வேலையை கூட செய்ய முடியாத நிலைமைக்கு போனார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற விக்ரமன் இது முழுக்க முழுக்க மருத்துவர்கள் செய்த தவறுதான் இதுபோல பல மருத்துவமனைகளில் நடக்கிறது ஆனால் என்ன செய்ய முடியும் என் மனைவி ஒரு மாதத்தில் பழையபடி நடனம் ஆடுவார் என்று சொன்னார்கள் ஆனால் தற்போது அவள் நடக்க முடியாமல் இருக்கிறாள். இழப்பீடா நான் பணம் கேட்கல, ஆனால், என் மனைவியை எப்படி நான் மருத்துவமனைக்கு கூட்டிட்டு போனானோ அந்த மாதிரி பண்ணி கொடுத்தா போதும்.

நான் முதலைச்சரிடம் இந்த வேண்டுகோளை முன் வைக்கிறேன்’ என்று உருக்கமுடன் பேசி இருந்தார். இப்படி ஒரு நிலையில் இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, இதனை கவனித்த முதலமைச்சர் விக்ரமன் மனைவிக்கு உதவி செய்ய முன்வந்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள விக்ரமன் ‘முதலமைச்சர் உத்தரவின் பேரில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சிறந்த மருத்துவ குழுவுடன் என் இல்லத்திற்கு வந்து என் மனைவியை பரிசோதித்து என் மனைவி குணமடைந்துவிடுவார் என்று நம்பிக்கை தெரிவித்து இருக்கின்றனர்’ என்று கூறியுள்ளார்.

Advertisement