விதி எவனையும் விடாது, ஏன் நீங்க என்ன சொன்னீங்கன்னு ஞாபகம் இருக்கா, எனக்கெல்லாம் குடும்பம் இல்லையா – ரோஜா

0
703
roja
- Advertisement -

பெண்பாவம் சும்மா விடாது. நீங்கள் செய்த பாவத்திற்கு தான் உங்களுக்கு இந்த நிலைமை என்று சந்திரபாபு நாயுடுக்கு பதிலடி கொடுத்துள்ள நடிகை ரோஜாவின் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஒரு காலத்தில் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ரோஜா. இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பிற மொழி படங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். பின் சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கிய உடன் ரோஜா அரசியல் பக்கம் சென்றுவிட்டார். தற்போது இவர் ஆந்திராவில் நகரி எம்எல்ஏ வாக இருக்கிறார். இதனிடையே ஆந்திர சட்டமன்றத்தில் தன்னையும் தன்னுடைய மனைவியையும் கிண்டல் கேலி செய்து பேசி இருக்கிறார்கள் என்று சந்திரபாபு நாயுடு சொல்லி இருந்தார்.

-விளம்பரம்-

மேலும், இனி நான் முதல்வராக மட்டுமே இந்த சட்டமன்றத்தில் அடி எடுத்து வைப்பேன் என்று சபதம் செய்துவிட்டு சந்திரபாபு நாயுடு சட்டமன்றத்தை விட்டு வெளியேறினார். இந்த தகவல் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்த நிலையில் இது குறித்து தற்போது நகரி எம்எல்ஏ நடிகை ரோஜா கூறியிருப்பது, பெண் பாவம் பொல்லாதது. எந்த ஜென்மத்திலும் பெண்பாவம் விடாது. சந்திரபாபு ஆட்சியில் என்னை அநியாயமாக ஒரு ஆண்டுகாலம் சட்டமன்றத்தில் அடியெடுத்து வைக்க விடாமல் தடை விதித்தனர். அதோடு பெண் என்று கூட பார்க்காமல் என்னை அவதூறாக கேலி கிண்டல் செய்து சட்டமன்றத்தில் இருந்து வெளியேற்றினார்கள். ஒரு நாள் முழுவதும் வெயிலில் காத்திருந்தேன்.

இதையும் பாருங்க : ப்பா, வானம் படத்தில் சிம்புக்கு ஜோடியாக நடித்த நடிகையா இது ? பிகினி உடையில் கொடுத்துள்ள போஸை பாருங்க.

- Advertisement -

கண்ணீர் வடித்தேன், ஆனால், யாரும் துணையாக நிற்க வில்லை. இதற்கெல்லாம் ஒரு நாள் சந்திரபாபு நாயுடு பதில் சொல்ல வேண்டும் என்று நினைத்த என் கனவு இன்று நிஜமாகி விட்டது. இன்னும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் ஆட்சி இரண்டரை ஆண்டுகள் உள்ளது. இனி சந்திரபாபு வெற்றிபெற்று முதல்வராவது என்பது கனவில் கூட நடக்காத விஷயம். அதனால் கடவுளே அவரை வாழ்நாள் முழுவதும் சட்டமன்றத்தில் அடி எடுத்து வைக்க விடாமல் செய்து விட்டார் என நினைக்கிறேன். விதி யாரையும் விட்டு வைக்காது. அனைவருக்கும் சரிபார்த்து தீர்த்துவிடும். அப்போது 72 வயதில் என் டி ஆர் ஐ நீங்கள் கலங்க செய்தீர்கள். இன்று 71 வயதில் நீங்கள் கலங்கி அந்த பாவத்திற்கு தண்டனை அனுபவித்துக் கொண்டு இருக்கிறீர்கள்.

நாம் என்ன செய்கிறோமோ அது தான் நமக்கு திரும்ப அடிக்கும். அது உங்கள் வாழ்க்கையில் சரியாக நடந்து இருக்கிறது. உங்களுடைய மனைவி குறித்து தவறாக பேசி விட்டார்கள் என்று இவ்வளவு தூரம் போகிறீர்களே, நான் ப்ளூ பிலிமில் நடித்தேன் என்று நீங்கள் என்னை கேவலப்படுத்தி இருக்கிறீர்கள். எங்களுக்கெல்லாம் குடும்பம் பிள்ளைகள் இல்லையா? அதிகாரத்தில் இருந்தபோது அனைவரையும் மனிதர்கள் கூட என்று பாராமல் விமர்சித்திருக்கிறார். மேலும், ஜெகன் மோகன் ரெட்டியின் தாய் மற்றும் சகோதரி குறித்து நீங்கள் பேசியது எல்லாம் யாருமே மறந்துவிடவில்லை. இனி நீங்கள் உங்கள் வாழ்நாளில் சட்டசபைக்கு திரும்ப வாய்ப்பே இல்லை. அதற்கு காரணம் நீங்கள் போட்ட சபதம், உங்கள் வாய் தான். மொத்தமாக உங்களுக்கு ஒரு குட் பாய் என்று கூறியுள்ளார். இப்படி ரோஜா கூறிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement