போனில் பெண் குரலில் மிமிக்ரி செய்த உதயநிதி ஸ்டாலின். மனைவியிடம் சிக்கிய அமைச்சர்.

0
252
Udhayanidhi
- Advertisement -

உதயநிதியின் மிமிக்ரி குறித்து திமுக எம்பி அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருந்தவர் உதயநிதி ஸ்டாலின். இவர் குருவி படத்தின் மூலம் தான் தயாரிப்பாளராக அறிமுகமானார். பின் இவர் ஆதவன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் நான்கு படங்களை தயாரித்தார். பின்னர் இவர் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார்.

-விளம்பரம்-

தனது முதல் படமே அமோக வெற்றி பெற்றதால் அடுத்தடுத்து படங்களில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார் உதயநிதி. இவர் நடிப்பில் வந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இப்படி இவர் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே கடந்த 2018 ஆம் ஆண்டு தீவிரமாக அரசியலில் இறங்கிவிட்டார். பின் 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் நின்று உதயநிதி ஸ்டாலின் வெற்றியும் பெற்றார்.

- Advertisement -

உதயநிதி குறித்த தகவல்:

அதை தொடர்ந்து இவர் படங்களில் நடித்தும் வந்தார். பின் 2022 ஆம் ஆண்டு விளையாட்டு துறை அமைச்சராக இவர் பதவியேற்றார். அதற்குப்பின் தான் இவர் இனி படங்களில் நடிக்க மாட்டேன் என்று அறிவித்து இருந்தார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியாகியிருந்த படம் மாமன்னன். இந்த படமும் அரசியல் கதைகளத்தை மையமாகக் கொண்டு இயக்குனர் மாரி செல்வராஜ் கொடுத்திருந்தார். இந்த படத்தில் பகத் பாசில், வடிவேலு உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

உதயநிதி அரசியல்:

இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது.
இதற்குப்பின் உதயநிதி ஸ்டாலின் அரசியலிலேயே முழுவதுமாக ஈடுபட்டார். குறிப்பாக இவருடைய கிண்டலான நகைச்சுவையான பேச்சு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தற்போது இவர் மக்களவைத் தேர்தலில் மும்முரமாக பிரச்சாரம் செய்து கொண்டு வருகிறார். இந்த நிலையில் திமுக மாநிலங்களவை எம்பியான எம் எம் அப்துல்லா அவர்கள் பேட்டி ஒன்றில் உதயநிதி குறித்து கூறி இருந்தது, எனக்கு கல்யாணம் ஆகி இரண்டு மாதங்கள் இருக்கும்.

-விளம்பரம்-

எம் எம் அப்துல்லா பேட்டி :

ஏதோ ஒரு வேலைக்காக சென்னை வந்திருந்தேன். அப்போது அன்பில் மகேஷ் அவர்கள் அரும்பாக்கத்தில் உள்ள வீட்டில் இருந்தார். நான் அவரை பார்க்க இரவு 7 மணிக்கு போயிருந்தேன். அப்போது அங்கு உதயநிதி ஸ்டாலினும் இருந்தார். நாங்கள் மூன்று பேருமே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். திடீரென்று எனக்கு போன் வந்தது. அப்போது நான் என்னுடைய போனை எடுத்துக் கொண்டு தனியாக பேசுவதற்கு போனேன். என் வீட்டில் இருந்து தான் என்னை அழைத்து இருந்தார்கள்.

உதயநிதி குறித்து சொன்னது:

அதை உதயநிதி புரிந்து கொண்டார். உடனே உதயநிதி எனக்கு பின்னாடி வந்து, ஏ அப்துல்லா என்ன திடீர்னு அங்க போய் நிக்கிற, இங்க வா! என்று பெண் குரலில் மிமிக்ரி செய்து பேசினார். இதைக் கேட்டு நான் ரொம்பவே அதிர்ச்சியாகி விட்டேன். அந்த அளவிற்கு உதயநிதி சிறப்பாக மிமிக்ரி செய்தார். மேலும், அந்த குரலைக் கேட்டு என்னுடைய மனைவி யாருங்க? என்று கேட்டார். நான், உதயநிதி என்று சொல்லியும் அவர் நம்பவில்லை. அவரிடம் போனை கொடுத்து பேச சொன்ன பிறகு தான் என்னுடைய மனைவி நம்பினார். இப்படி உண்மையாலுமே உதயநிதி ஜாலியாகவும். கேலி கிண்டலுடன் மிமிக்கிரியும் செய்வார் என்று பேசி இருக்கிறார்.

Advertisement