முகுநூல் பயன்படுத்தும் இஸ்லாம் பெண்களை குறித்து தர குறைவாக பேசிய இஸ்லாம் மத போதகரின் வீடியோவை தனக்கு டேக் செய்தததால் கடுப்பாகி இருக்கிறார் மூடர் கூடம் பட இயக்குனர். பொதுவாக இஸ்லாம் மத பெண்களுக்கு பல கடுப்பாடுகள் இருக்கத்தான் செய்கிறது. இப்படி ஒரு நிலையில் முகநூல் பயன்படுத்தினாலே அந்த பெண் விபச்சாரி என்று இஸ்லாம் மத போதகர் ஒருவர் பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
அந்த வீடியோவில் பேசியுள்ள அந்த நபர், இறை நம்பிக்கை உடைய ஒரு பெண் 5 வேளை தொழுகை செய்யும் பெண், கடவுள் மீது பயம் உள்ள ஒரு பெண் தன்னுடைய கணவருக்கு செய்கின்ற கடமைகளையும் பிள்ளைகளுக்கு செய்கின்ற கடமைகளையும் தன்னுடைய மாமியார் மாமியாருக்கு செய்ய வேண்டிய கடமைகளையும் தன்னுடைய தாய் தந்தையருக்கு செய்யும் கடமைகளையும் முறையாக நிறைவேற்றி அவ்வளவு ஒழுக்கம் கொண்ட ஒரு பெண் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான இப்படிப்பட்ட ஒரு பெண் நரகத்திற்கு செல்வாரா.
போவாள், இதை அனைத்தையும் செய்தாலும் அவன் நரகத்திற்கு போவாள் எப்போது தெரியுமா ? அவள் ஃபேஸ்புக்கில் மட்டும் இருந்தால் போதும். அவள் ஃபேஸ்புக்கில் மட்டும் இருந்தால் அவள் இத்தனையும் பின்பற்றினால் கூட அவளை நரகத்திற்கு கொண்டு செல்வதற்கு இந்த ஒரு காரணம் போதும். ஆகவே, தாய்மார்களே நல்ல குடும்ப பெண்ணிற்கு ஃபேஸ்புக் தேவையில்லை இன்ஸ்டாகிராம் தேவையில்
லை.
என்னுடைய வார்த்தை கடுமையான வார்த்தையாக இருக்கலாம் ஆனால் இதுதான் சத்தியம் தாய்மார்களே. ஒரு பெண் பேஸ்புக்கில் இருந்து தன்னுடைய போட்டோவை போட்டு தன்னுடைய குடும்ப உறுப்பினர் போட்டோவை போட்டு எனக்கு நிறைய லைக் வர வேண்டும் அதிகம் ஷேர் வர வேண்டும் என்று நினைத்தால் அவள் ஏற்கனவே விபச்சாரம் செய்து விட்டாள் அல்லது வருங்காலத்தில் விபச்சாரம் செய்யப் போகிறாள்.
ஃபேஸ்புக் என்ற ஒன்றை உருவாக்கியது பெண்களின் மானத்தை வாங்குவதற்காக தான். கண்ட கண்ட வக்கிரர்கள் பெண்களை கண்டு ரசிப்பதற்கு உருவாக்கப்பட்டதுதான் இந்த பேஸ்புக் என்று கூறியிருக்கிறார் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வர முகநூலில் இருநதால் அவள் விபச்சாரி தானா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இந்த வீடியோவை கண்ட பிக்பாஸ் நடிகை காஜல் கூட இந்த நபரை திட்டித்தீர்த்த பதிவிட்டிருந்தார். இப்படி ஒரு நிலையில் இந்த வீடியோவை ட்விட்டரில் மூடர்கூடம் பட இயக்குனர் நவீன் முகமதலிக்கு பலர் டேக் செய்து இருக்கிறார்கள். இதனால் கடுப்பான அவர் ஆயிரம் வருடம் பின்தங்கி மூளைவளர்ச்சி குன்றியிருக்கும் இந்த கோமாளியின் பேச்சுக்கு என்ன ஏம்பா tag பன்றிங்க என் தந்தை பெயர் முகமதலி என்பதலேயே எனக்கும் அவருக்கும் சம்பந்தம் கற்பிக்கும் உங்கள் மடமையை என்னவென்று சொல்ல என்று பதிவிட்டிருக்கிறார்.