மொட்டை ராஜேந்திரனை நான் கடவுள் படத்திலிருந்து தான் பலருக்கே தெரியும். பின்னர் ராஜா ராணியில் அனைவருக்கும் தெரிந்த முகமாக ஃபேமஸ் ஆகிவிட்டார். அப்படி இருந்து ஆரம்பித்து தற்போது லீடிங் கமெடியனாக வலம் வருகிறார் மொட்டை ராஜேந்திரன்.
பேசிக்காக அவர் ஒரு ஸ்டன்ட் நடிகர், பல படங்களில் நடிகர்களுக்கு அந்த காலம் முதல் டூப் போட்டு நடித்து வருகிறார். அதன் பின்னர் தான் பல வருடங்கள் கழித்து பாலாவின் நான் கடவுள் படத்தில் கொடூர வில்லன் கேடக்டரில் அறிமுகமானார்.
ஆனால், அவர் தலையில் ஏன் முடிகள் சுத்தமாக இல்லை என யோசித்தது உண்டா? மலையாலப் படத்தில் ஒரு முறை ஸ்டன்ட் மேனாக நடித்த போது, ஒரு தண்ணீர் குட்டையில் ஸ்டன்ட் அடித்திருக்கிறார். ஆனால், விழுந்த பின்பு தான் தெரிந்தது அது கெமிக்கள் கழிவுகள் கலந்த தண்ணீர் என்று. அதன் பிறகு அவருக்கு தலையில் முடி முளைக்கவே இல்லை.
தற்போது மோகனா என்ற ஒரு பேய்படத்தில் முழு நீள கேரக்டரில் நடித்துகொண்டிருக்கிறார். அந்த வேலையில் மொட்டை ராஜேந்திரன்
முடியுடன் உள்ள் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அதனைக் கீழே காணலாம் :