தனது அம்மாவுடன் குயூட்டான புகைப்படத்தை வெளியிட்டு அன்னையர் தின வாழ்த்தை சொன்ன மௌன ராகம் சக்தி.

0
8337
Mounaragam
- Advertisement -

விஜய் தொலைக்காட்சிகளில் பல சூப்பர் ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒளிபரப்பான தொடர் தான் மௌன ராகம். இந்த தொடர் இசை, குடும்பம் கதையை பின்னணியாகக் கொண்டது. இந்த சீரியல் வங்காளி மொழி தொடரின் தழுவல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் கிருத்திகா, சபிதா, ராஜீவ் மற்றும் சிப்பி ரஞ்சித் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த தொடரை தாய் செல்வம் என்பவர் இயக்கியுள்ளார். இந்த தொடருக்கு பிரபல இசையமைப்பாளர் எம். ஜெயச்சந்திரன் பின்னணி இசை அமைத்து உள்ளார். சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் பேபி கிருத்திகா.

-விளம்பரம்-

அழகிய குரல் வளமும் மனமும் கொண்டவள் சக்தி. இவள் 7 வயது சிறுமி. அவரது அம்மா மற்றும் தாய்மாமனின் பாதுகாப்பில் வளர்ந்து வருகிறார். தன் தந்தை யார் என்று தெரியாமல் இருப்பதால் பல அவமானங்கள் ஏற்படுகிறது. தன் தந்தையை காண சென்னைக்கு வருகிறார். கார்த்திக், மல்லிகா உடன் வாழ்கிறாரா? காதம்பரி உடன் வாழ்கிறாரா? என பல திருப்பங்கள் நிறைந்ததாக இந்த தொடர் உள்ளது.

- Advertisement -

மேலும், இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் பேபி கிருத்திகா அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் தாயுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் இன்று அன்னையர் தினத்தை அனைவரும் கொண்டாடி வருகிறார்கள். பலர் தங்களுடைய வாழ்த்துக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள்.

அந்த வகையில் பேபி கிருத்திகாவும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் இவர் தானா கிருத்திகாவின் அம்மாவா? என்று வியப்பில் கேட்டு வருகிறார்கள். தற்போது இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement