மகளே இல்லை என்று ஒதுக்கிய ராஜ்கிரண் – முனிஷ் ராஜாவிற்கு திருமணம் செய்து வைத்த பிரபல டிவி சேனல்.

0
442
Munish
- Advertisement -

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சீரியல் நடிகர் முனீஸ் ராஜா ராஜ்கிரண் மகளை திருமணம் செய்துகொண்டார் என்ற செய்தி பெரும் பரபரப்பானது. இந்த செய்தி வெளியான போது இதுகுறித்து பதிவு ஒன்றை போட்ட ராஜ்கிரண் என் “மகளை”, ஒரு சீரியல் நடிகர் கல்யாணம் பண்ணியிருப்பதாக ஒரு தவறான தகவல் என் பார்வைக்கு வந்தது. என் மீது அபிமானம் கொண்டுள்ள அனைவருக்கும், உண்மையை விளக்க வேண்டியது என் கடமை.எனக்கு திப்பு சுல்தான் @ நைனார் முஹம்மது என்ற ஒரே ஒரு மகனைத்தவிர, வேறு பிள்ளைகள் கிடையாது. இந்து மதத்தைச்சேர்ந்த ஒரு வளர்ப்பு மகள் இருந்தார். அவர் பெயர் பிரியா. அவர் மனம் சந்தோசப்படுவதற்காக, அவரை “வளர்ப்பு மகள்” என்று நான் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் சொந்த மகள் என்றே சொல்லி வந்தேன்.

-விளம்பரம்-

முகநூல் மூலம் அவருடன் நட்பு ஏற்படுத்திக்கொண்ட சீரியல் நடிகர், என்னென்ன முறையிலோ அந்தப்பெண்ணை, தன் வசப்படுத்தி, கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற மனநிலைக்கு கொண்டு வந்திருக்கிறார். இந்த விசயம் என் காதுக்கு வந்ததும், அந்த நடிகரைப்பற்றி நான் விசாரிக்க ஆரம்பித்ததில், அவர் மகா மட்டரகமான புத்தியும், பணத்துக்காக எதையும் செய்யும் ஈனத்தனமும் கொண்டவர் என்பது, எனக்குத்தெரிய வந்தது.

- Advertisement -

இதையும் பாருங்க : சன் டிவி Anchor, மெட்டி ஒலி சீரியல் பிரபலம், வட சென்னை கானா பாடகர் – பிக் பாஸ் 6 போட்டியாளர்கள் அப்டேட்.

பணம் பறிப்பதும் மட்டுமே குறிக்கோள் :

அவரது நோக்கம் பெண்ணை வைத்து வாழ்வதில்லை. எனக்கு இருக்கும் நல்ல பெயரை பயன்படுத்தி, சினிமா துறையில் வாய்ப்புகளை பெறுவதும், என்னிடமிருந்து பணம் பறிப்பதும் மட்டுமே, அவரது குறிக்கோள். இதையெல்லாம் பலவிதமாக விசாரித்து தெரிந்து கொண்ட நான், என் வளர்ப்பு பெண்ணிடம் சொன்னேன்.அவர் காதில், நான் சொன்னது எதுவும் ஏறவில்லை. அவரைத்தான் கட்டிக்கொள்வேன் என்றும், உங்கள் பெண் என்று நானோ, அவரோ வெளியில் சொல்லிக்கொள்ள மாட்டோம் என்றும், அந்தப்பெண் சொல்லியிருந்தார்.

-விளம்பரம்-

இந்த கல்யாணம் வேண்டாம் என்றோம் :

அப்பாவின் மனதை வேதனைப்படுத்தி இந்தக்கல்யாணம் வேண்டாம் என்று என் மனைவி, அந்தப்பெண்ணிடம் அழுது மன்றாடி, எப்படியெப்படியோவெல்லாம் மடிப்பிச்சை கேட்டு, ஒரு வழியாக, ” சரி, இவர் வேண்டாம், உங்கள் விருப்பப்படி நல்ல மாப்பிள்ளை பாருங்கள்” என்று சொல்ல, நாங்களும் மாப்பிள்ளை பார்த்துககொண்டிருந்தோம்.இந்த சூழ்நிலையில் தான், என் மனைவியின் தோழியான, “லட்சுமி பார்வதியை” பார்த்து விட்டு வருவதாக எங்களிடம் சொல்லிவிட்டு, இந்தப்பெண் ஆந்திரா போய் நான்கு மாதங்களாகி விட்டன, இன்னும் எங்கள் வீட்டுக்கு திரும்பவில்லை.

பொய் பொய்யாக பேசிக்கொண்டு திரிகிறது

இந்த நிலையில் தான், இப்படி ஒரு செய்தி வலம் வந்து கொண்டிருக்கிறது. தான் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக, என் மனைவி தான் இதற்கெல்லாம் காரணம் என்பது போல், பொய் பொய்யாக பேசிக்கொண்டு திரிகிறது, இந்தப்பெண். இந்த விசயத்தில் நான் கோபப்பட்டபோது கூட, என்னை சமாதானப்படுத்தி, அந்தப்பெண்ணுக்காக பரிந்து பேசி இன்று வரை அந்தப்பெண்ணுக்கு உறுதுணையாக நிற்பது, என் மனைவி மட்டும் தான்.என் வளர்ப்புப்பெண், ஒரு தரமான மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்திருந்தால், சாதி பேதம் பார்க்காத நான், சந்தோசமாக கட்டிக்கொடுத்திருப்பேன்.

பணத்துக்காக எதையும் செய்பவன் :

ஆனால், தரங்கெட்ட, பணத்துக்காக எதையும் செய்யத்துணியும் ஒருவனை தேர்ந்தெடுத்து, தன் வாழ்க்கையை நாசமாக்கிக் கொண்டாளே என்பது மட்டுமே என் வருத்தம். இதன் மூலம் நான் எல்லோரிடமும் சொல்லிக்கொள்வது, என்னவென்றால், என் பெயரைப்பயன்படுத்தி இவர்கள் உங்களை எந்த வகையிலாவது அணுகினால், அதனால் ஏற்படும் எந்தப்பிரச்சினைக்கும் நான் பொறுப்பல்ல, என்பது தான் என்று பதிவிட்டிருந்தார்.

முனிஷ் ராஜா வெளியிட்ட வீடியோ :

இப்படி ஒரு நிலையின் ராஜ்கிரனின் கோபமான பதிவிற்கு பின்னர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கும் முனீஸ் ராஜா என்னுடைய மனைவி ஆசைப்படி அவருக்கு என்னுடைய கல்யாண பரிசாக ஒரு புதிய தொழிலை ஆரம்பித்து வைக்கலாம் என்று நினைத்திருக்கிறேன் அதனுடைய திறப்பு விழா இந்த மாத இறுதியில் வைக்க திட்டமிட்டு இருக்கிறேன் அதற்கு என்னுடைய நண்பர்கள் உறவுகளும் மற்றும் மீடியா நண்பர்களும் என்னுடைய அழைப்பை ஏற்று அந்த விழாவிற்கு வந்து எங்களுடைய தொழில் சிறப்பாக அமைய ஆசீர்வாதம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ஜீ தமிழில் நடந்த திருமணம் :

அதுபோக என்னுடைய மனைவிக்காக என்னுடைய சொந்த ஊரில் ஐம்பது லட்சம் ரூபாய் செலவில் ஒரு வீட்டை கட்டி வருகிறேன் அது இன்னும் இரண்டு மாதத்தில் முடிந்து விடும் அந்த வீட்டின் திறப்பு விழாவிலும் என்னுடைய சொந்த பந்தங்களை எல்லாம் அழைத்து அவர்கள் ஆசீர்வாதத்துடன் அந்த வீட்டில் பால் காய்ச்ச இருக்கிறேன் என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில்  ராஜ்கிரண் மற்றும் அவர்கள் இருவரையும் அழைத்து ஜீ தமிழில் திருமணம் செய்து வைத்துள்ளனர். 

Advertisement