நாடோடிகள் பட நடிகை அபிநயாவா இது. பாத்தா கண்டிப்பா நம்பமாடீங்க.

0
180986
abhinaya
- Advertisement -

மிக அழகான முகம் தோற்றம் உடைய அபிநயா அவர்களுக்கு இயற்கையிலேயே சரியாக வாய் பேசாத, காது கேட்கும் திறன் குறைபாடு உடையவர். இருந்தாலும் இவருடைய தன்னம்பிக்கையாலும், விடா முயற்சியினாலும் சினிமா உலகில் தன் நடிப்பின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர். அதுமட்டும் இல்லாமல் மக்களிடையே பிரபலமாக பேசப்பட்டார். மேலும், நடிகை அபிநயா அவர்கள் நாடோடிகள் திரைப்படத்தின் மூலம் தான் தன்னுடைய திரை வாழ்க்கையைத் தொடங்கினார்.

-விளம்பரம்-

அதற்கு பிறகு தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் நடித்து வந்தார். சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கிய ‘ஸ்டாலின்’ தெலுங்கு திரைப் படத்தில் பாதுகாப்பு காவலாளியாக நடித்தவர் அபிநயாவின் தந்தை. மேலும்,அந்த படத்தின் போது தான் ஏ. ஆர். முருகதாஸ் அவர்கள் அபிநயாவை பார்த்தார். அதன் பின் ஏ. ஆர். முருகதாஸ் அவர்கள் இயக்குனர் சசிகுமாரிடம் அபிநயாவை அறிமுகப்படுத்தினார். மேலும், சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் தயாரிப்பில் வெளியான படம் தான் “நாடோடிகள்” , இந்த படம் மக்களிடையே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பயங்கர வெற்றியை பெற்றது. அதுமட்டுமில்லாமல் அபிநயா அவர்கள் ‘சம்போ சிவ சம்போ’ என்ற படத்திலும் நடித்து உள்ளார். இதனைத்தொடர்ந்து ‘ஹுத்துகாரு’ திரைப்படத்திலும் இவரே நடித்தார்.

இதையும் பாருங்க : திருமண நாளில் தனது குழந்தையின் முகத்தை முதன் முறையாக காட்டிய பிக் பாஸ் சுஜா.

- Advertisement -

மேலும், இவர் 2 ஃபிலிம் ஃபேர் விருதுகள் நாடோடி படத்திற்காகவும், சம்போ சிவ சம்போ படத்திற்காகவும் வாங்கி உள்ளார். இதனை தொடர்ந்து அபிநயா அவர்கள் சமுத்திரக்கனி இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘ஈசன்’ திரைப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதோடு ரசிகர்களிடையே பயங்கர வரவேற்பை பெற்ற படம் என்று கூட சொல்லலாம். இதனை தொடர்ந்து 2011ஆம் ஆண்டு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சூர்யா அவர்களின் நடிப்பில் வெளிவந்த ‘ஏழாம் அறிவு’ திரைப் படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்து உள்ளார். தற்போது இவர் த ரிப்போர்ட்டர் என்ற மலையாளத் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். உடன் தம்மு என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதுமட்டுமில்லாமல் இவர் பிரேம் சாய் இயக்கத்தில் கௌதம் மேனன் தயாரிக்கும் புது படத்திலும் நடிக்க உள்ளார் என்ற தகவல்கள் வந்து உள்ளது. மேலும்,இவர் ஆயிரத்தில் ஒருவன், குற்றம் 23,வீரம், மேல தாளம், தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் உட்பட பல தமிழ் படங்களில் நடித்து உள்ளார். இந்நிலையில் நடிகை அபிநயா அவர்கள் கடும் உடற்பயற்சிகளை செய்து தன்னுடைய உடல் எடையை குறைத்து உள்ளார் என்ற தகவல் வெளி வந்து உள்ளது. அதுமட்டும் இல்லாமல் எல்லா நடிகைகளை போல அபிநயாவும் போட்டோஷூட் நடத்தி உள்ளார்.

-விளம்பரம்-

அதில் இவர் செம ஸ்லிம்மாகவும், மாடர்ன் உடையில் மிக அழகாகவும் போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் நாடோடிகள் அபிநயாவா!!! என்று வாயை பிளக்கும் அளவிற்கு ஆச்சரியத்தில் உள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.

Advertisement