கொஞ்சம் Chubby ஆயிட்டேன், சீக்கிரம் பழைய மாதிரி மாறிடறேன் – மீண்டும் நடிக்க வந்த NINI ரக்சா.

0
29195
raksha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் சமீப காலமாகவே சினிமா டைட்டல்களை மையமாக கொண்டு பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. கடைக்குட்டி சிங்கம் ஈரமான ரோஜாவே, நாம் இருவர் நமக்கிருவர் என்று சினிமா தலைப்புகளை வைத்து பல்வேறு சீரியல்கள் வந்தது. அதே போல ராஜா ராணி, கனா காணும் காலங்கள், ஆபீஸ், மௌன ராகம் என்று பல சீரியல்கள் இரண்டு பாகங்கள் வெளியானது. அந்த வகையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கிருவார் சீரியலும் இரண்டு பாகமாக ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

இந்த தொடரில் ரக்‌ஷா, ரேஷ்மி என்று இரண்டு நடிகைகள் நடித்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் கொரோனா லாக் டவுனில் ஷூட்டிங் நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் இந்த இரண்டு நடிகைகளுமே சீரியலில் இருந்து நீக்கப்பட்டனர். இதுகுறித்து பேசிய ரக்‌ஷா,லாக்டௌன் அறிவிச்சதும் பெங்களூரு கிளம்பி வந்தேன். ரெண்டரை மாசம் கழிச்சு ஷூட்டிங்னு சொல்லிக் கூப்பிட்டாங்க.

- Advertisement -

அப்ப பெங்களூரு, சென்னை ரெண்டு இடத்துலயுமே பாசிட்டிவ் கேஸ்கள் அதிகமா இருந்ததால எங்க வீட்டுல ஷூட்டிங்ல கலந்துக்க வேண்டாம்னாங்க. ஸ்டேட் விட்டு ஸ்டேட் வர்றதுல இ-பாஸ் மாதிரியான் நடைமுறைகள் வேற இருந்ததால, `என்னால கலந்துக்க முடியாது’ன்னு சொன்னேன். திரும்ப முழு லாக்டௌன் முடிஞ்சு மறுபடியும் ஷூட்டிங் தொடங்கினப்ப எனக்கு எந்த அழைப்பும் வரலை என்று கூறி இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் இவருக்கு பதிலாக சரவணன் மீனாட்சி புகழ் ரஷிதா இந்த தொடரில் நடித்து வருகிறார். ஆனால், ரசிகர்கள் பலரும் ரக்‌ஷாவை மிகவும் மிஸ் செய்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘அன்பே சிவம்’ என்ற புதிய தொடரில் நடிக்க துவங்கி இருக்கிறார். மேலும், நான் முன்பை விட கொஞ்சம் சப்பியாக மாறிவிட்டேன் விரைவில் பழைய படி உங்களை சந்திக்கிறேன் என்றும் கூறியுள்ளார் ரக்ஷா.

-விளம்பரம்-
Advertisement