மெர்சல் படம் ‘சிட்டுக் குருவி பாட்டியின்’ கண்ணீர் கலங்க வைக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக வருகிறது. இதை நெட்டிசன்கள் அதிகமாக தயார் செய்தும் லைக் செய்தும் வருகிறார்கள். 2017 ஆம் ஆண்டு இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய்யின் நடிப்பில் வெளிவந்த படம் மெர்சல். இவர்களுடன் எஸ். ஜே. சூர்யா, சமந்தா, வடிவேலு, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நடித்து உள்ளனர். மேலும், இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் 200 கோடிக்கு மேல் செய்தது. இந்த படத்தில் சிட்டுக் குருவி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் சீனியம்மாள் பாட்டி. அதோடு முதல் படத்திலேயே சீனியம்மாள் பாட்டி மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இதனை தொடர்ந்து சீனியம்மாள் பாட்டி அவர்கள் 2019 ஆம் ஆண்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளி வந்த ‘விசுவாசம்’ என்ற படத்திலும் நடித்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் சீனியம்மாள் பாட்டி தல மற்றும் தளபதி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார். மேலும், சீனியம்மாள் பாட்டி சினிமாவுக்கு வந்த ஆரம்பத்திலேயே முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக போய்க் கொண்டிருக்கும் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
இதையும் பாருங்க :நடிகர் ஆர்யாவின் உண்மையான பெயர் இது தானா ? இது தெரியுமா உங்களுக்கு.
இந்த சீரியல் தற்போது 500வது நாள் எபிசோடை கடந்து இருக்கிறது. அதற்காக விஜய் டிவி இந்த சீரியலுக்கு விழா ஒன்றை நடத்தி வந்தார்கள். அப்போது அந்த குழுவில் உள்ள சில பேர் அந்த பாட்டியிடம் ஏன் இவ்வளவு வயது ஆகியும் நடிக்க வந்தீங்கா?? என்ன காரணம்? என்று கேட்டு உள்ளார்கள். அதற்கு அவர் கூறியது, என்னுடைய புள்ளைங்க, பொண்ணுங்க எல்லாத்தையுமே கல்யாணம் பண்ணி கொடுத்து விட்டேன். என் பையன் சினிமாவுல தான் வேலை பார்த்துட்டு வந்தான். அப்ப தான் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் சார் என்ன பார்த்தார். பின் என் மகனிடம் உங்க அம்மாவ கூட்டிட்டு வாங்கன்னு சொன்னார்.
அதற்கு பின் நான் சங்கரை சந்தித்தேன். அவர் தான் என்னை சினிமா துறையில் அறிமுகப் படுத்தி வைத்தார். இப்ப நான் நல்ல நிலையில் இருக்கிறேன்.சாகப்போற காலத்துல யாரையும் நம்பி எதிர் பார்க்கக் கூடாது. நமக்கு தேவையானதை நாமலே சம்பாதித்து செய்துக்கணும்’ என கண்ணிர் மல்க பேசினார். சீனியம்மாள் பாட்டி பேசிய பேச்சு நம்மையே கண்ணீர் குளத்தில் ஆக்கியது. அதோடு அரங்கத்தில் உள்ள எல்லோரும் கண்ணீர் கடலில் மூழ்குவது போல் கண் கலங்கி நின்றார்கள். மேலும், அவரை வாழ்த்த வயதில்லை என்று சீனியம்மாள் பாட்டியை வணங்கினார்கள்.