நான் சாப்பாட்டுக்கே வழி இல்லாத காலத்துல வீட்ல ஒக்கார வச்சி சோறு போட்டான் – CWCக்கு வந்த நாகேஷ் பேரனை கண்டு கலங்கிய புகழ்.

0
902
- Advertisement -

குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுத்த நாகேஷ் பேரனை பார்த்து புகழ் கண்கலங்கி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் மூன்று சீசன்களாக ஒளிபரப்பாகி வந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மூன்று சீசனும் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். அதிலும் கொரோனா லாக்டவுனில் மக்களுக்கு இருந்த பிரச்சனையில் மருந்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது என்றே சொல்லலாம். இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது.

- Advertisement -

குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி:

தற்போது குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் புதிய கோமாளிகளும் கலந்து கொண்டுள்ளனர். இதில் நடிகை ஷெரின், விசித்ரா, மேகா பட நடிகை ஸ்ருஷ்டி, சிவகர்த்துகேயன் பட நடிகை ஆண்ட்ரியான், ராஜ் ஐயப்பா, பாக்கியலட்சிமி VJ விஷால், கிஷோர் ராஜ்குமார், காளையன் , மைம் கோபி, ஜி பி முத்து, சிங்கப்பூர் தீபன், மணிமேகலை, சுனிதா, ரவீனா, தங்கதுரை, சில்மிஷம் சிவா, மோனிஷா என பல போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்.

நிகழ்ச்சியில் புது போட்டியாளர்கள்:

இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ் கண்கலங்கி அழுது இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, இந்த நிகழ்ச்சியில் இரு புது போட்டியாளர்கள் என்ட்ரி கொடுத்திருக்கிறார்கள். இதில் பழம்பெரும் நடிகர் நாகேஷின் பேரன் கஜேஷ் கலந்து கொண்டிருந்தார்.

-விளம்பரம்-

கஜேஷ்-புகழ் உறவு:

இவரை அடுத்து கலை இயக்குனர் கிரண் கலந்து இருக்கிறார். மேலும், நிகழ்ச்சியில் நாகேஷின் பேரன் கஜேஷ் வந்தவுடன் புகழ் அதிர்ச்சி அடைந்து விட்டார். பின் ஓடிப்போய் அவரைக் கட்டி அணைத்து புகழ் அழுது இருக்கிறார். புகழ் கஜேஷிடம் இப்படி நடந்து கொண்டது பலருக்கும் வியப்பாக இருந்தது. அதன் பின் புகழ் அதற்கான காரணத்தை கூறியிருக்கிறார்.

புகழ் அழத காரணம்:

அதாவது, புகழ் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு அவருக்கு சாப்பாடு, உடை, தங்க இடம் என அனைத்துமே பல மாதங்கள் பார்த்துக் கொண்டது கஜேஸ் தானாம். இருவரும் ரொம்ப நெருங்கிய நண்பர்கள். புகழ் தற்போது இப்படி இருப்பதற்கு காரணமானவர்களில் ஒருவர் கஜேஸ். இதனால்தான் புகழ் கஜேஷை பார்த்தவுடன் கண்கலங்கி இருக்கிறார்.

Advertisement