கார்த்தியின் சுல்தான் படத்தில் நாட்டாமை பட நடிகை – வெளியான எக்ஸ்குலுசீவ் புகைப்படம்.

0
1767
keer
- Advertisement -

தமிழில் கடந்த 2005ஆம் ஆண்டு பிரசன்னா மற்றும் லைலா நடிப்பில் வெளிவந்த படம் ‘கண்ட நாள் முதல்’. இந்த படத்தில் தனது 15 வயதில் அறிமுகம் ஆனவர் ரெஜினா கேசான்ரா. அதன் பின்னர், அழகிய அசுரா, பஞ்சமித்ரம் என சில தமிழ் படங்களில் நடித்தாலும் 2013ல் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் பிரபலம் ஆனார் ரெஜினா. இந்த படத்தில் இவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தை தொடர்ந்து இவர் தமிழில் ராஜதந்திரம் மாநகரம் சரவணன் இருக்கபயமேன் போன்ற பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

அதே காட்சியில் வரும் பெண் பற்றி யாரும் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. இவர் நாட்டாமை படத்திற்கு பின்னர் லிங்கா படத்தில் கூட நடித்து இருக்கிறார். அந்த செய்தியை கடந்த சில நாட்களுக்கு முன்னர் நம் வலைதளத்தில் பதிவிட்டு இருந்தோம்.அதன் பின்னர் இவரை பற்றி அறிய நாம் முற்பட்ட போது, அவரை எப்படியோ தொடர்பு கொண்டு நாம் பேசினோம். அவரின் பெயர் கீர்த்தி நாயுடு. நாட்டாமை படத்திற்கு பின்னர் கே எஸ் ரவிக்குமாரின் லிங்கா படத்தில் நடித்த போது அங்கே இருந்தவர்கள் பலரும் இவரை நாட்டாமை படத்தில் நடித்த நடிகை என்று நம்பவில்லை.

- Advertisement -

பின்னர் மேக்கப் போட்டு முடித்த பின்னர் கேஎஸ் ரவிக்குமார் இவரைக் கண்டதும் இவரை அடையாளம் கண்டுகொண்டு நீங்களா என்று ஆச்சரியப்பட்டார். ஆம், அந்த அளவிற்கு இத்தனை வருடம் ஆகியும் அதே இளமையுடன் இருக்கிறார். இவர் படித்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். இவர் பிரபலமானது என்னவோ நாட்டாமை படத்தின் மூலமாக இருக்கலாம். ஆனால், இவர் இந்து , சேதுபதி ஐபிஎஸ் , நம்ம அண்ணாச்சி, மே மாதம் என்று பல படங்களில் நடித்து உள்ளார்.

அது மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு என்று பல்வேறு படங்களில் நடித்திருக்கும் இவர் மீனா, ரோஜா, ரம்பா என்று பல்வேறு முன்னணி நடிகைகளில் தோழியாக நடித்திருக்கிறார். அவ்வளவு ஏன் இவர் அஜித் நடிப்பில் 2012 ஆம் ஆண்டு வெளியான ‘பில்லா 2’ படத்தில் கூட நடித்துள்ளார். இப்படி ஒரு நிலையில்நீண்ட இடைவெளிக்கு பின்னர் இவர் கார்த்தியின் சுல்தான் படத்தில் நடித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement