ஒரு தொகுதியில் கூட ஜெய்க்காததுக்கு காரணமே இதான் – கோபமும் ஆதங்கமும் எனக்கு நிறைய உண்டு. MNMதின் அடுத்த எலிமினேஷன்.

0
704
- Advertisement -

மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவராக இருந்த டாக்டர் மகேந்திரன்,கட்சியில் இருந்து விலகியதையடுத்து அந்த கட்சியில் இருந்து பல்வேறு நபர்கள் வெளியேறி வருகின்றனர். அவரை தொடர்ந்து சட்ட மன்ற தேர்தலில் மக்கள் நீதி மையம் சார்பாக போட்டியிட்ட சென்னை தமிழச்சி என்ற புனைப்பெயர் கொண்ட பத்மப்ரியாவும் மக்கள் நீதி மையம் கட்சியில் இருந்து விள்குவதாக அறிவித்து இருந்தார். அதே போல மக்கள் நீதி மய்யத்தின் பொது செயலாளராக இருந்த சந்தோஷ் பாபுவும் விலகுவதாக அறிவித்து இருந்தார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில்  மக்கள் நீதி மய்யத்தில் செயலாளராக பணியாற்றி வந்த சி.கே குமரவேல் ராஜினாமா செய்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2019 மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகிப் போனாலும் தமிழகத்தில் உங்களாலும் மக்கள் நீதி மய்யத்தாலும் மட்டுமே ஒரு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கையில் தான் நான் மீண்டும் இணைந்தேன். மக்களிடத்தில் அந்த மாற்றத்திற்கான எதிர்பார்ப்பும் மிக அதிகமாக இருந்தது.

இதையும் பாருங்க : இரண்டு முறை கொரோனாவில் இருந்து மீண்டுள்ள குக்கு வித் கோமாளி போட்டியாளர் – யாருன்னு தெரிஞ்சா ஷாக்காவீங்க.

- Advertisement -

கடந்த நவம்பர் – டிசம்பர் மாதங்களில் கட்சியின் நடவடிக்கைகளாலும் உங்களுடைய சூறாவளி பயணத்தினாலும் ஆளும் மக்களிடையே மய்யத்தின் மீதான வரவேற்பும், நம்பிக்கையும் அதிகரித்ததை கண்கூடாக பார்க்க முடிந்தது. மய்யத்துக்கு டார்ச்லை சின்னம் கிடைத்தபோதும், ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்த போதும் மக்கள் நீதி மய்யத்தின் மீதான நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் மேலும் பிரகாசமானது. ஆனால் இன்று நமக்கான வாய்ப்புகளை நாம் இழந்துவிட்டோம்.

எதிர்க்கட்சியில் அமர வேண்டிய அத்தனை தகுதிகளும் நமக்கு இருந்தபோதும், ஒரு தொகுதியில் கூட நம்மால் வெற்றி பெற முடியவில்லையே ஏன்?உங்களுடைய அரசியல் ஆலோசகர்களும் அவர்களுடைய தவறான வழிகாட்டுதலும் தான் காரணம். ஒரு தொகுதியில் வெற்றி பெற்றால் போதும் என்கிற இவர்களுடைய குறுகிய எண்ணமும் செயல்பாடுகளும் தான் மக்களிடையே இருந்த நம் மீதான நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் தகர்த்து விட்டது.நமது தோல்விக்கான காரணங்களையும் காரணிகளையும் இதற்குமுன் விலகிய பொறுப்பாளர்கள் ஊடகங்களின்முன் வைத்து விட்டார்கள்.

-விளம்பரம்-

அவர்கள் முன்வைத்த காரணங்களில் உண்மை இல்லாமல் இல்லை என்பது நீங்களும் அறிவீர்கள். புதிதாக நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை.வரலாறு படைத்தவர்களாக இருக்க வேண்டிய நாம் வரலாறு படிப்பவர்கள் ஆக மாறி விட்டோமே என்கிற கோபமும் ஆதங்கமும் எனக்கு நிறைய உண்டு. தனிமனித பிம்பத்தை மட்டுமே சார்ந்து இருக்கிற அரசியலை விடவும், மதசார்பற்ற ஜனநாயக அரசியல் பாதையில் பயணிக்க விரும்புகிறேன்.ஆகவே மக்கள் நீதி மையத்தின் அடிப்படை உறுப்பினர் என்ற நிலையில் இருந்து உடனடியாக விலகுகிறேன். உங்களுக்கும் உங்கள் கட்சியினருக்கும் வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Advertisement